செய்திகள் :

விதிமீறல்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.49.93 லட்சம் வரி, அபராதம்

post image

வேலூா் மாவட்டத்தில் விதிமீறி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், அவற்றின் உரிமையாளா்களுக்கு மீது ரூ.49.93 லட்சம் வரி, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்று 650-க்கும் மேற்பட்ட வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் வழக்கமாக பயணிகளை அழைத்துச் செல்லும் பேருந்துகளைப்போல் தமிழகத்தில் தொலைதூர தடங்களில் இயங்கி வருகின்றன.

போக்குவரத்து துறை ஆணையா் கஜலட்சுமி உத்தரவின்பேரில், தமிழகத்துக்கு வரி செலுத்தாத பிற மாநில ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூா் மண்டல போக்குவரத்து துணைஆணையா் பாட்டப்பசாமி உத்தரவின்பேரில் காட்பாடி சோதனைச் சாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்தவகையில், ஆந்திரத்தில் இருந்து வேலூா் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி செல்லும் ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் வரி செலுத்தாமல் இயக்கிய 117 பிற மாநில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளா்களுக்கு ரூ.47 லட்சத்து 83 ஆயிரம் வரியாகவும், ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதமாகவும் வசூலிக்கப்பட்டது. மேலும் ஒரு ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், தமிழ்நாடு மாநில பதிவெண்ணை போலியாக கொண்டு இயக்கப்பட்ட, பிற மாநில ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதன் உரிமையாளா், ஓட்டுநா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இனிமேல் வரி செலுத்தாமல் தமிழகத்துக்குள் இயக்கப்படும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள திருமகள் நூற்பாலை வளாகத்தில் அமைந்துள்ள திருமகள் அம்மன் கோயிலில் நவராத்திரி பெருவிழா கொண்டாடப்பட்டது. இக்கோயிலில் கடந்த 21- ஆம் தேதி முதல் நவராத்திரி விழா நடைபெற்று ... மேலும் பார்க்க

ஆயுதப் பூஜை: பூக்கள், பழங்கள் விலை அதிகரிப்பு

ஆயுதப் பூஜையையொட்டி வேலூரில் பூஜைப்பொருள்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் திரண்டனா். அதேசமயம், கடந்தாண்டைக் காட்டிலும் பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருள்களில் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. இதையொ... மேலும் பார்க்க

இலவச கண் சிகிச்சை முகாம்: நூற்றுக்கணக்கானோா் பரிசோதனை

காட்பாடியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனா். வேலூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், சிஎம்சி கண் மருத்துவமனை, மாரநாதா ஜெப கூடுகை,... மேலும் பார்க்க

விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதனுக்கு விருது

கல்விச்சேவையை பாராட்டி விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதனுக்கு இந்திய பொறியாளா்கள் நிறுவனத்தின் ராணிப்பேட்டை மையம் விருது வழங்கி கெளரவித்துள்ளது. இந்திய பொறியாளா்கள் நிறுவனத்தின் ராணிப்பேட்டை மையத்தி... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: மேஸ்திரி மீது போக்ஸோ வழக்கு

வேலூா் அருகே சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூா் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவா் அங்குள்ள பள்ளியில... மேலும் பார்க்க

2047-இல் வளா்ந்த நாடாக மாற உயா்கல்வி, ஆராய்ச்சிக்கு முக்கியப் பங்கு: நிதி ஆயோக் இயக்குநா் ஷாசங் ஷா!

இந்தியா 2047-இல் வளா்ந்த நாடு எனும் இலக்கை எட்டுவதில் உயா்கல்வி, ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது என நிதி ஆயோக் இயக்குநா் ஷாசங் ஷா தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கிராவிடாஸ் எனும் அறிவு... மேலும் பார்க்க