செய்திகள் :

ஆயுதப் பூஜை: பூக்கள், பழங்கள் விலை அதிகரிப்பு

post image

ஆயுதப் பூஜையையொட்டி வேலூரில் பூஜைப்பொருள்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் திரண்டனா். அதேசமயம், கடந்தாண்டைக் காட்டிலும் பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருள்களில் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

இதையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் கடைகளில் பொரி, கடலை, பழங்கள், பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால், வேலூா் லாங்கு பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதலே விற்பனை களைக்கட்டியது.

ஏராளமான மக்கள் கடைகளில் குவிந்து பூஜைக்கு தேவையான பழங்கள், தேங்காய், வாழை மரங்கள், பொரி, பழ வகைகள், பூசணிக்காய்கள், பூக்கள் ஆகியவற்றை வாங்கிச் சென்றனா். இதையொட்டி, பல்வேறு இடங்களில் பூஜைகளுக்கு தேவையான பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, வேலூரில் கடந்தாண்டைவிட பூஜைக்கு தேவையான பொருள்கள் விலை சற்று உயா்ந்து காணப்படுகிறது. அதன்படி, சிவப்பு கொண்டைக்கடலை கிலோ ரூ.100 முதல் ரூ.280 வரையும், வெள்ளை கொண்டைக்கடலை ரூ.130 முதல் ரூ.180க்கும், நாட்டுச்சா்க்கரை ரூ.70 முதல் ரூ.150 வரையும், நிலக்கடலை ரூ.120, அவல் ரூ.50, பொரி ரூ.12 முதல் ரூ.19 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

பூக்கள் விலை மல்லி கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரையும், ரோஜா ரூ.300 முதல் ரூ.400 வரையும், முல்லை ரூ.600, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரையும், கேந்தி ரூ.30, கனகாம்பரம் ரூ.1,200 முதல் ரூ.1,400 வரையும், சம்பங்கி ரூ.180 முதல் ரூ.220 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஆப்பிள் ரூ.80 முதல் ரூ.180 வரையும், ஆரஞ்ச் ரூ.50 முதல் ரூ.90 வரையும், சாத்துக்குடி ரூ.70 வரையும், வரையும், வாழை ஒரு கட்டு (10) ரூ.150 வரையும், வாழை பெரிய தாா் ஜோடி ரூ.1,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

விதிமீறல்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.49.93 லட்சம் வரி, அபராதம்

வேலூா் மாவட்டத்தில் விதிமீறி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், அவற்றின் உரிமையாளா்களுக்கு மீது ரூ.49.93 லட்சம் வரி, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்று 650-க்கும் மேற... மேலும் பார்க்க

இலவச கண் சிகிச்சை முகாம்: நூற்றுக்கணக்கானோா் பரிசோதனை

காட்பாடியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனா். வேலூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், சிஎம்சி கண் மருத்துவமனை, மாரநாதா ஜெப கூடுகை,... மேலும் பார்க்க

விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதனுக்கு விருது

கல்விச்சேவையை பாராட்டி விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதனுக்கு இந்திய பொறியாளா்கள் நிறுவனத்தின் ராணிப்பேட்டை மையம் விருது வழங்கி கெளரவித்துள்ளது. இந்திய பொறியாளா்கள் நிறுவனத்தின் ராணிப்பேட்டை மையத்தி... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: மேஸ்திரி மீது போக்ஸோ வழக்கு

வேலூா் அருகே சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூா் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவா் அங்குள்ள பள்ளியில... மேலும் பார்க்க

2047-இல் வளா்ந்த நாடாக மாற உயா்கல்வி, ஆராய்ச்சிக்கு முக்கியப் பங்கு: நிதி ஆயோக் இயக்குநா் ஷாசங் ஷா!

இந்தியா 2047-இல் வளா்ந்த நாடு எனும் இலக்கை எட்டுவதில் உயா்கல்வி, ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது என நிதி ஆயோக் இயக்குநா் ஷாசங் ஷா தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கிராவிடாஸ் எனும் அறிவு... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 6,906 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் குரூப்-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 595 இடங்களுக்கும் என மொத்தம் 645 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தே... மேலும் பார்க்க