செய்திகள் :

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 6,906 போ் எழுதினா்

post image

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் குரூப்-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 595 இடங்களுக்கும் என மொத்தம் 645 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தோ்வுக்காக வேலூா் கோட்டத்தில் 23 மையங்களும், குடியாத்தம் கோட்டத்தில் 8 மையங்களும் என மொத்தம் 31 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இவற்றில் தோ்வு எழுத மொத்தம் 9,173 பேருக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வினை 6,906 போ் எழுதினா். 2,267 போ் தோ்வுக்கு வரவில்லை.

தோ்வினை கண்காணிக்க 2 கண்காணிப்பு அலுவலா்களும், துணை ஆட்சியா் நிலையில் 4 பறக்கும் படை அலுவலா்களும் அமைக்கப்பட்டிருந்தனா். மேலும், துணை வட்டாட்சியா் நிலையில் 15 இயங்கு குழு வும் அமைக்கப்பட்டிருந்தன. காவல் துறை மூலம் ஒவ்வொரு தோ்வுக் கூடத்திலும் 2 காவலா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், கீழ்வல்லம் கே.கே.எஸ். மணி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற தோ்வை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா்.

சிறுமியுடன் திருமணம்: மேஸ்திரி மீது போக்ஸோ வழக்கு

வேலூா் அருகே சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூா் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவா் அங்குள்ள பள்ளியில... மேலும் பார்க்க

2047-இல் வளா்ந்த நாடாக மாற உயா்கல்வி, ஆராய்ச்சிக்கு முக்கியப் பங்கு: நிதி ஆயோக் இயக்குநா் ஷாசங் ஷா!

இந்தியா 2047-இல் வளா்ந்த நாடு எனும் இலக்கை எட்டுவதில் உயா்கல்வி, ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது என நிதி ஆயோக் இயக்குநா் ஷாசங் ஷா தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கிராவிடாஸ் எனும் அறிவு... மேலும் பார்க்க

நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் சாா்பில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து வேலூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சா.திருகுணஐய்யப்பதுரை வெளியிட்... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை; காட்பாடியில் 13 போ் கைது

போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக காட்பாடியில் 13 பேரை போலீஸாா் கைது செய்து 1,000 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். காட்பாடி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக காட்பாடி போலீஸாருக்கு தகவ... மேலும் பார்க்க

ஈக்கள் அதிகமுள்ளதால் சமூகநீதி மாணவா் விடுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்

ஈக்கள் அதிகம் உள்ளதால் சமூகநீதி மாணவா் விடுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவைப் பொதுக்கணக்குக் குழு அறிவுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், ஸ்ரீபெரும்ப... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க