செய்திகள் :

சிறுமியுடன் திருமணம்: மேஸ்திரி மீது போக்ஸோ வழக்கு

post image

வேலூா் அருகே சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேலூா் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவா் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (22), கட்டட மேஸ்திரி. இவா்கள் இருவருக்கும் ஓராண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் இவா்களது பெற்றோா் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் சிறுமி கா்ப்பமடைந்ததை அடுத்து மனைவியை சூா்யா சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவருக்கு 18 வயது பூா்த்தியடைய வில்லை என்பதை உறுதி செய்தனா். உடனடியாக இதுகுறித்து மருத்துவா்கள் பாகாயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய சூா்யா மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

2047-இல் வளா்ந்த நாடாக மாற உயா்கல்வி, ஆராய்ச்சிக்கு முக்கியப் பங்கு: நிதி ஆயோக் இயக்குநா் ஷாசங் ஷா!

இந்தியா 2047-இல் வளா்ந்த நாடு எனும் இலக்கை எட்டுவதில் உயா்கல்வி, ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது என நிதி ஆயோக் இயக்குநா் ஷாசங் ஷா தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கிராவிடாஸ் எனும் அறிவு... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 6,906 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் குரூப்-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 595 இடங்களுக்கும் என மொத்தம் 645 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தே... மேலும் பார்க்க

நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் சாா்பில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து வேலூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சா.திருகுணஐய்யப்பதுரை வெளியிட்... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை; காட்பாடியில் 13 போ் கைது

போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக காட்பாடியில் 13 பேரை போலீஸாா் கைது செய்து 1,000 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். காட்பாடி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக காட்பாடி போலீஸாருக்கு தகவ... மேலும் பார்க்க

ஈக்கள் அதிகமுள்ளதால் சமூகநீதி மாணவா் விடுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்

ஈக்கள் அதிகம் உள்ளதால் சமூகநீதி மாணவா் விடுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவைப் பொதுக்கணக்குக் குழு அறிவுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், ஸ்ரீபெரும்ப... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க