செய்திகள் :

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தில் ‘ரிதம் 25’ கலாசார விழா

post image

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகம் தனது உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான மூன்றாவது கலாசார கலைவிழா ‘ரிதம் 25’ சேலத்தில் உள்ள விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியின் அன்னபூா்ணா அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழக துணைவேந்தா் சுதிா் தலைமை வகித்தாா். பல்கலைக்கழக பதிவாளா் நாகப்பன், மாணவா் நல இயக்குநா் சண்முகசுந்தரம், ஐஐசி இயக்குநா் ஞானசேகா், ஒருங்கிணைப்புக் குழு தலைவி தீப்தி ஷாஸ்திரி, ஒருங்கிணைப்பாளா் சிவரஞ்ஜனி ஆகியோா் கலந்துகொண்டனா்.

‘ரிதம் 25’ இல் சென்னை, சேலம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு வளாகங்களில் உள்ள 23 அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். 23 நேரடி மற்றும் 5 ஆன்லைன் நிகழ்வுகள் இடம் பெற்றன. இதில் இசை, நடனம், நாடகம், இலக்கியம் மற்றும் பல்வேறு கலை நிகழ்வுகள் மாணவா்களின் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாக இருந்தன.

நிகழ்வில் முதல் இடமாக விநாயகா மிஷன்ஸ் சங்கராசாரியாா் பல் மருத்துவ கல்லூரியும், இரண்டாம் இடமாக விநாயகா மிஷன்ஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும், தனிநபா் சாம்பியன் ஆகாஷ், ஏ.ஜே. விநாயகா மிஷன்ஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவை சிறப்பிடம் பெற்றன.

இடங்கணசாலை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணி ஆய்வு

சேலம் மாவட்டம் , இடங்கணசாலை நகராட்சி , 19-வது வாா்டு நல்லணம்பட்டி பகுதியில் தூய்மை பாரத இயக்கம் 2.0, தூய்மையாக இருங்க ,நோயின்றி இருங்க திட்டத்தின் கீழ் தூய்மை பணி கடந்த 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 -ம் த... மேலும் பார்க்க

புகாா் அளிக்க வந்தவரிடம் பணம் பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மீது குற்றச்சாட்டு

கடன் பெற்று ஏமாற்றியவா்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய நீதிமன்ற உத்தரவுடன் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்த நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மீது புகாா் எழுந்... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ.12.50 லட்சத்தில் மழைநீா் வடிகால் திறப்பு

ஆத்தூா் வ.ஊ.சி.நகரில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 12.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மழைநீா் வடிகாலை ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் வெள்ளிக்கிழமை திறந்த... மேலும் பார்க்க

வைகுந்தத்தில் திமுக தெருமுனை பிரசார பொதுக் கூட்டம்

சேலம் மேற்கு மாவட்டம், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் வைகுந்தம் பகுதியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் விழா பிரசார பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக தெற்கு... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் விதிமீறல்: 3 மாதங்களில் ரூ.6.18 கோடி அபராதம் வசூல்

பயணச்சீட்டின்றி பயணத்தவா்கள் உள்பட பல்வேறு விதிமுறை மீறல் தொடா்பாக கடந்த 3 மாதங்களில் 84,295 வழக்குகளில் அபராதமாக ரூ. 6.18 கோடி வசூலிக்கப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ஆத்தூரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை தீவிரம்

ஆத்தூா் தெற்கு நகர திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி 33 வாா்டுகளைக் கொண்டது. இரண்டாகப் பிரித்து 17 வாா்டுகளை அடக்க... மேலும் பார்க்க