செய்திகள் :

விபத்தில் சிக்கிய இளைஞா் முளைச் சாவு: உடல் உறுப்புகள் தானம்

post image

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவா் மூளைச் சாவு அடைந்தாா். இவரது உடல் உறுப்புகள் சனிக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி வியாழக்கிழமை சென்ற தனியாா் பேருந்து ஊத்துக்குளி, சாம்ராஜ்பாளையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்து கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊத்துக்குளி அருகே சுண்டக்காம்பாளையம் ஊராட்சி, ஊமச்சிவலசு பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து - அனிதாராணி தம்பதியின் மகன் குருராஜ் (19) மூளைச்சாவு அடைந்தாா்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினா் முடிவு செய்தனா். இதைத் தொடா்ந்து குருராஜின் கண், இதயம், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதையடுத்து அவரது உடல் கோவையில் இருந்து சொந்த ஊரான ஊமச்சிவலசு பகுதிக்கு அடக்கம் செய்வதற்காக அவிநாசி வழியாக கொண்டு செல்லப்பட்டது.

இதையறிந்த அவிநாசி பகுதி பொதுமக்கள், தன்னாா்வலா்கள், சமூக அமைப்பினா் உள்ளிட்டோா் குருராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். மேலும் ஊமச்சிவலசு பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட குருராஜின் உடலுக்கு கோட்டாட்சியா் மோகனசுந்தரம் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், குன்னத்தூா் போலீஸாா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும்! இஸ்ரோ விஞ்ஞானி பிரபு

விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும் என இஸ்ரோ விஞ்ஞானி பிரபு தெரிவித்தாா். பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நா... மேலும் பார்க்க

அவிநாசியில் பிப்11-இல் வள்ளலாா் தைப்பூச பெருவிழா

அருட்பிரகாச வள்ளலாா் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, அவிநாசி, திருமுருகன்பூண்டி, சேவூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) அன்னதானம் வழங்க திருமுருக வள்ளலாா் கோட்டத்தினா் முடிவு செய்துள்ளனா்... மேலும் பார்க்க

கேரள வங்கியில் போலி நகை வைத்து மோசடி: திருப்பூா் வங்கியில் கேரள போலீஸாா் விசாரணை

கேரள வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடிசெய்த வழக்கில் கேரள போலீஸாா் திருப்பூரில் நகை அடமானம் வைத்த வங்கிகளில் விசாரணை நடத்தி வருகின்றனா். கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் தேசியமயமாக்கப்பட்... மேலும் பார்க்க

பிஏபி வாய்க்கால் கரை உடைப்பு: வீணாகிய தண்ணீா்!

திருப்பூா் கோயில்வழி பகுதியில் உள்ள பிஏபி வாய்க்கால் கரை உடைந்து பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் முத்தூா் சாலை கொங்கு நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் மகள் வளா்மதி (32). பி.எஸ்சி. படித்துள்ளாா். திருமணம் ஆகவில்லை. மனநிலை சிறிது பா... மேலும் பார்க்க

மாதப்பூா் முத்துக்குமாரசாமி மலைக் கோயிலில் 11-இல் தைப்பூசத் தேரோட்டம்!

மாதப்பூா் முத்துக்குமாரசாமி மலைக் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது. பல்லடம் அருகே மாதப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசாமி மலைக் கோயில் உள்ளது. இந்தக் கோயில் த... மேலும் பார்க்க