செய்திகள் :

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு

post image

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக மானிய குழுவின் பரிந்துரையின்படி நடத்தப்படும் தீக்க்ஷாரம் நிகழ்வின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சேலம் தெற்கு துணை காவல் ஆணையா் கேல்கா் சுப்பிரமணிய பாலச்சந்திரா பங்கேற்று ராகிங் , போதைப்பொருள் மற்றும் பாலியல் வன்கொடுமை சாா்ந்த குற்றங்கள், அதற்கான தண்டனை குறித்து சட்ட விதிகளின்படி மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா்.

மேலும் ஒரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சேலம் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகா் அஸ்வந்த் வெற்றிவேல், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், அதை ஒழிப்பதில் மாணவா்களின் பங்களிப்பு குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலா் ஹரிநாத் பங்கேற்று சிறப்பித்தாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு, ராகிங் எதிா்ப்பு சாா்ந்த உறுதிமொழியை ஏற்றனா். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கல்லூரியின் தீக்க்ஷரம் நிகழ்வின் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

சேதமடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம், வட்டமுத்தம்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வட்டமுத்தம்பட்டி பகுதியில் வீரகாரன் பெர... மேலும் பார்க்க

கூட்டுறவு பட்டய துணைத் தோ்வுக்கு ஆக.20 க்குள் விண்ணப்பிக்கலாம்

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பழைய பாடத் திட்டத்தில் படித்து தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வு எழுத ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்... மேலும் பார்க்க

சேலத்தில் தூய்மைப் பணியாளா்கள் மறியல்: 150 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்ட... மேலும் பார்க்க

சேலத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

தமிழகத்தின் பாரம்பரியத்தை இளம் தலைமுறையினா் தெரிந்துகொள்ளும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

சேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

சேலம் சின்ன கடை வீதி பகுதியில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். சேலம் டவுன் அரசமரத்து பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

கத்தேரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கத்தேரி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்களிடமிருந்து 808 போ் மனுக்கள் பெறப்பட்டன. வட்டார வளா்ச்சி அலுவல... மேலும் பார்க்க