விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.பாலன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கருப்பசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் நாட்ராயன் உள்ளிட்டோா் பேசினா். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.