செய்திகள் :

`விவசாயத்திற்கு வாங்கும் நிதியை சொந்த தேவைக்கு பயன்படுத்துகின்றனர்' - மகாராஷ்டிரா அமைச்சர் புகார்

post image

மகாராஷ்டிராவில் ஏற்கெனவே விவசாயிகள் கடன் தொல்லையால் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் சில இடங்களில் பருவம் தவறிய மழையால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நாசிக் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே நேரில் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விவசாயி, துணை முதல்வர் அஜித் பவார் கடன் தள்ளுபடி செய்யப்படாது என்று கூறி இருக்கிறார். சரியாக கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு எதாவது சலுகை உண்டா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் மாணிக்ராவ், ``கடனை சரியாக திரும்ப செலுத்துபவர்கள் தொடர்ந்து அதனை செய்யவேண்டும். ஆனால் சிலர் கடன் தள்ளுபடியாகும் என்ற நம்பிக்கையில் 5 ஆண்டுகள் காத்திருக்கின்றனர்.

விவசாயத்திற்கு என்று சொல்லி கடன் வாங்குகின்றனர். ஆனால் கடனை திரும்ப செலுத்துவதில்லை. கடன் தள்ளுபடி செய்யப்படும்போது, அப்பணத்தில் ஒரு ரூபாய் கூட விவசாய தேவைக்கு பயன்படுத்துவதில்லை. இதே போன்று நீர்ப்பாசனம், பைப்லைன், குளம் வெட்டுவதற்காக கொடுக்கும் பணத்தை விவசாயிகள் அந்த தேவைக்கு பயன்படுத்தாமல் மாறாக திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் போன்ற சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்'' என்று கூறி இருக்கிறார். அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஸ்வர்தன் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, அமைச்சரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று கோரி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``அமைச்சர் மாணிக்ராவ் எப்போதும் அதிகார போதையில் விவசாயிகளை மரியாதை குறைவாக பேசுகிறார். இதற்கு முன்பு விவசாயிகளை பிச்சைக்காரர்களுடன் ஒப்பிட்டு பேசி விவசாயிகளை அவமதித்தார். எனவே அவரை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு மாணிக்ராவ் அளித்திருந்த பேட்டியில், பிச்சைக்காரர்கள் கூட ஒரு ரூபாயை வாங்க மாட்டார்கள். ஆனால் மகாராஷ்டிரா அரசு ஒரு ரூபாயில் பயிர் காப்பீடு வழங்குகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். மகாராஷ்டிராவில் கடந்த 24 வருடத்தில் 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: எம்புரான் படக் காட்சிகள் நீக்கம்; போராடிய விவசாயிகள் மகிழ்ச்சி

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் 2 ஆம் பாகமாக எம்புரான் திரைப்படம் வெளியாகியுள்ளது.இந்தத் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவர... மேலும் பார்க்க

நிறமி வீடியோ வைரல்; தர்பூசணி வியாபாரம் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு; உணவுத்துறை அதிகாரி இடமாற்றம்

“தர்பூசணியை வெட்டி, அதைக் காட்டன் துண்டு அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து துடைக்க வேண்டும். அப்போது அந்த காட்டான் அல்லது டிஷ்யூ பேப்பர் சிவப்பு நிறமாக மாறினால், அது கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணி. இயற்கையா... மேலும் பார்க்க

``சதீஷ்குமார் வீடியோக்காரர்களை அழைத்துக்கொண்டு சோதனை செய்வதுபோல் நாடகம்" - கொதிக்கும் வியாபாரிகள்

தர்பூசணியில் கலப்படம் செய்யப்படுவதாக வீடியோ வெளியிட்டு, பிறகு கலப்படம் இல்லை என்று பின்வாங்கிய சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வியாபாரிகள், விவ... மேலும் பார்க்க

தர்பூசணியின் சிவப்பு நிறத்துக்குக் காரணம் ரசாயன ஊசியல்ல; வதந்திகளை நம்பவே நம்பாதீர்கள் - வேளாண்துறை

“கடையில் வாங்கிய தர்பூசணியை சிறு துண்டாக வெட்டி, அதைக் காட்டன் துண்டு அல்லது டிஷ்யூ பேப்பரை கொண்டு துடைக்க வேண்டும். அப்படி துடைக்கும்போது துண்டு அல்லது டிஷ்யூ பேப்பர் சிவப்பு நிறமாக மாறினால், அது கல... மேலும் பார்க்க

திண்டுக்கல்: காசம்பட்டி பல்லுயிர் தளமாக அறிவிப்பு; விவசாயிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியைத் தமிழகத்தின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக 2022-ல் தமிழக அரசு அறிவித்தது.இதையடுத்து திண்டுக்கல்... மேலும் பார்க்க

ஊட்டி: தரிசு நிலம் டு ஆர்கானிக் கூட்டு வேளாண்மைத் தோட்டம்; அசத்தும் ஆனைப்பள்ளம் பழங்குடிகள்!

ஆங்கிலேயர்களால் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மேலை நாட்டுக் காய்கறி சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆறுகளின் ஊற்றுக்கண்ணாக இருந்து வ... மேலும் பார்க்க