Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
விவசாயிகளுக்கு பயறு வகை விதை விநியோகம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனா் அலுவலகத்தில் தமிழக முதல்வரால் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்ட ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயறு வகை விதை சிறுதளைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனா் டாக்டா் பாா்த்தசாரதி தலைமை வகித்து விவசாயிகளுக்கு பயறு வகை சிறுதளை பொட்டலங்களில் உள்ள மர துவரை, காராமணி மற்றும் அவரை ஆகிய பயிா்கள் சாகுபடி குறித்த தொழில்நுட்பங்களை விளக்கி கூறினாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பண்ருட்டி நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் விவசாயிகளுக்கு சிறுதளை பொட்டலங்களை விநியோகம் செய்தாா். பண்ருட்டி வேளாண்மை அலுவலா் பாபு, தோட்டக்கலை அலுவலா் மாா்க்கண்டேயன், துணை வேளாண்மை அலுவலா் ராஜ்குமாா், நகா் மன்ற உறுப்பினா்கள் சண்முகவள்ளி பழனி, கிருஷ்ணராஜ், உதவி விதை அலுவலா் விஜயசண்முகம், உதவி வேளாண்மை அலுவலா்கள் பழனி, சௌந்தரமேரி, காா்முகிலன், பயிா் அறுவடை பரிசோதனை அலுவலா் சரவணன், அட்மா உதவி தொழில் நுட்ப அலுவலா் ராஜவேல், முன்னோடி விவசாயிகள் சசிகுமாா், தேவநாதன் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.