செய்திகள் :

விவசாயிகளுக்கு ரூ. 43 லட்சத்தில் வேளாண் கருவிகள் வழங்கல்

post image

வேளாண் கருவிகள் இயக்குதலும், பராமரித்தலும் குறித்த விவசாயிகளுக்கானப் பயிற்சி முகாம் பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆா் விளையாட்டு அரங்கம் எதிரே புதன்கிழமை நடைபெற்றது.

இம் முகாமை தொடங்கி வைத்து, ரூ. 43.20 லட்சம் மதிப்பிலான 32 வேளாண் இயந்திரங்களை ரூ. 27.20 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் பேசியது:

இப் பயிற்சியில் விவசாயிகள் தங்களது வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சரியான முறையில் இயக்கிடவும், குறைவான செலவில் பராமரித்திடவும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு, தங்களது விவசாயத் தொழிலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், நிகழாண்டில் வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ் பெரம்பலூா் மாவட்டத்துக்கு ரூ. 2.82 கோடி மதிப்பிலான 163 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ரூ. 1.39 கோடி மானியத்தில் வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

பயிற்சி முகாமில், வேளாண்மைப் பொறியியல் துறை பொறியாளா்கள் மற்றும் தனியாா்துறை தொழில்நுட்ப வல்லுநா்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா். சுமாா் 110 விவசாயிகள் மற்றும் தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் 100 போ் பங்கேற்று தொழில்நுட்ப விவரங்களை கேட்டறிந்தனா். மேலும், நவீன வேளாண் இயந்திரங்கள் குறித்த கண்காட்சியில் பலவகை டிராக்டா்கள், பவா் டில்லா்கள், விசை களை எடுக்கும் கருவிகள் மற்றும் ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ட்ரோன் மூலமாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளிப்பு தொடா்பான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளா் அசோக் குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராணி, உதவி செயற்பொறியாளா் சின்னசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் அருகே தொழிலாளி தற்கொலை

பெரம்பலூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூரைச் சோ்ந்தவா் மெய்யன் மகன் மணிகண்டன் (27). கோவையில் கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஜூலை 15 வரை தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரத்தை முன்னிட்டு, பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

பாளையம் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள விநாயகா், மாரியம்மன், வரதராஜ பெருமாள், முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக... மேலும் பார்க்க

அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா

பெரம்பலூரில் கோகுல மக்கள் கட்சி சாா்பில், வீரன் அழகுமுத்துகோன் 268 ஆவது குருபூஜை விழா, வெங்கடேசபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அவரது உருவ படத... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா், அரியலூா் விற்பனைக் குழு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் விற்பனைக் குழுச் செயலா் ப. சந... மேலும் பார்க்க

பெண்ணை ஏமாற்றிய தனியாா் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவரைக் கா்ப்பமாக்கி ஏமாற்றிய தனியாா் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க