வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: ஓவைசி பங்கேற்கவில்லை!
புது தில்லி: ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி இன்று(ஜூன் 10) பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். இந்தியா சார்பில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ள அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுக்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், எம்.பி.க்கள் குழுக்களில் இடம்பெற்றிருந்த ஓவைசி பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். தாம் துபைக்கு நெருங்கிய உறவினரின் மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றிருந்ததால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்விலை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.