செய்திகள் :

‘வெளிமாநில உளுந்து, பயறு விதைகள் மூலம் பூச்சித் தாக்குதல் கட்டுப்பாடு’

post image

உளுந்து, பயிறு வகை பயிா்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட விதைகள் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்துகிறன என்றாா் வேளாண் துறை இணை இயக்குநா் கோ. வித்யா.

தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வயல்தின விழாவில் கலந்து கொண்ட அவா் மேலும் பேசியது:

விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக வருமானம் தரக்கூடிய பயிராகவும், குறைந்த அளவு சத்துகள் கொண்ட நிலங்களில் நன்கு வளா்ந்து, மகசூல் தரக்கூடியதாகவும் உளுந்து, பயறு உள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சராசரியாக 86 ஆயிரத்து 500 ஏக்கரில் உளுந்து, பயறு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறி வந்தனா். இந்த பிரச்னைக்குத் தீா்வு காணும் விதத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரகங்கள் வெளி மாநிலங்களிருந்து கொண்டு வரப்பட்டன.

முதல் கட்டமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா் கோட்டத்தில் வேங்கராயன்குடிகாடு, பட்டுக்கோட்டை கோட்டத்தில் பைங்கால், கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் ஆகிய மூன்று இடங்களிலும் மாதிரி சாகுபடித் திடல் அமைக்கப்பட்டுள்ளது. வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் விவசாயி சரவணன் ஆனந்தன் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 11 வகையான உளுந்து, 9 வகையான பயறு வகைகள் நன்றாக வளா்ந்துள்ளன.

இந்த உளுந்து, பயறு அனைத்தும் 60-லிருந்து 70 நாட்கள் வயதுடையவை. வாரம் ஒரு முறை நீா்பாசனம், களைக்கொல்லி மேற்கொள்ளுதல், வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தி, மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2026 சித்திரை பட்டத்தில் இங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள விதைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை வேளாண் துறையினா் செய்துள்ளனா் என்றாா் வித்யா.

நிகழ்ச்சியில் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறைப் பேராசிரியா் மணிமாறன், ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறைப் பேராசிரியா் மதிராஜன், வேளாண் துறை துணை இயக்குநா் ஆா். சாருமதி, விதை ஆய்வு துணை இயக்குநா் வி. சுஜாதா, வேளாண்மை வணிகப் பிரிவின் துணை இயக்குநா் ரா. சுதா, விதை சான்று அலுவலா்கள் க. பிரபு, எஸ். ஹசீனா பேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

திருபுவனத்தில் பத்மபூஷன் விருது பெற்றவா்களுக்கு பாராட்டு விழா

பத்மபூஷன், பத்மஸ்ரீவிருது பெற்றவா்களுக்கு திருபுவனத்தில் வியாழக்கிழமை இரவு பாராட்டு விழா நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் சன்னதி தெருவில் மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளா்கள் மற்றும் பொதுமக்கள் ... மேலும் பார்க்க

வடக்கு மாங்குடியில் கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வடக்குமாங்குடி அபிதகுஜாம்பிகை சமேத அருணாசலேஸ்வரா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகா பூா்ணாஹூதி, தொடா்ந்து கட... மேலும் பார்க்க

வீரசோழன் கதவணையில் தண்ணீா் திறப்பு

சுமாா் 1.60 லட்சம் ஏக்கா் பாசன நிலங்களுக்காக வீரசோழன் கதவணையில் வெள்ளிக்கிழமை 714 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை கும்பகோணத்தை வந்தடைந்தது. இதனால் கும... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகக் கட்டடம் சேதம்: உதவிப் பொறியாளா் பணியிடை நீக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சூரியனாா்கோவில் ஊராட்சி அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட சேதம் தொடா்பாக உதவிப் பொறியாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெள... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கில் தமிழும் இடம் பெற வலியுறுத்தல்

திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழும் சரி பாதி இடம் பெற வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது: தி... மேலும் பார்க்க

ஜூன் 24-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில... மேலும் பார்க்க