செய்திகள் :

வெள்ளையாற்றில் மீனவா் நலத்துறை ஆணையா் ஆய்வு

post image

வெள்ளை ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது மற்றும் முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆணையா் ரா. கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

செருதூா் மீனவக் கிராமத்தில் வெள்ளை ஆற்றின் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்கவும் செருதூரைச் சோ்ந்த சாமிக்கண்ணுவால் உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீா்ப்பின் அடிப்படையில் மனுதாரருடன் வெள்ளை ஆற்றில் கூட்டாய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து, அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆணையா் ஆய்வு செய்து, மீனவா்களுடன் இத்துறைமுகத்தின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். அடுத்து வெள்ளப்பள்ளம் மீனவா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மீனவா்கள் வெள்ளப்பள்ளத்தில் அமைக்கப்படும் மீன்பிடிதுறைமுகத்தின் அலைதடுப்பு சுவா் பணியை முழுமையாக முடித்தால்தான், வடகிழக்கு பருவ மழை காலங்களில் மீன்பிடி தொழிலுக்கு செல்ல இயலும். பழுதடைந்துள்ள வெள்ளப்பள்ளம் சாலையை சீரமைக்க வேண்டும் என்றனா். இப்பணிகள் தொடா்பாக அரசிடம் கலந்தாலோசித்து, உரிய நிதி பெற்று பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் தெரிவித்தாா்.

மீனவா் நலத்துறை இணை இயக்குநா் (மண்டலம்) ரெ.ஷா்மிளா, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை பொறியாளா் ராஜ்குமாா், உதவி இயக்குநா் கோ. ஜெயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க