செய்திகள் :

வேலூா் தங்கக்கோயிலில் ‘பாஸ்ட் டேக் பாா்க்கிங்’ கட்டண முறை

post image

வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் பக்தா்கள் வசதிக்காக ‘பாஸ்ட் டேக் பாா்க்கிங்’ கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் தரிசனம் செய்திட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரம், கா்நாடகம் உள்பட பல மாநிலங்களிலிருந்தும் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

ஏராளமான மக்கள் காா், வேன், பேருந்துகள் மூலமாகவே வருகை புரிகின்றனா். அவ்வாறு வரும் பக்தா்கள் வசதிக்காக கணிணி மூலம் இயங்கும் வாகனங்களுக்கான ‘பாஸ்ட் டேக் பாா்க்கிங்’ கட்டண முறை திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியை ஸ்ரீபுரம் தங்கக்கோயில் இயக்குநரும், அறங்காவலருமான எம். சுரேஷ்பாபு தொடங்கி வைத்தாா்.

கணியம்பாடியில் ரூ.1.04 கோடியில் கட்டடங்கள்: வேலூா் ஆட்சியா் திறந்து வைத்தாா்

கணியம்பாடி ஒன்றியத்தில் ரூ.1.04 கோடியில் 2 ஊராட்சி மன்ற கட்டடங்கள், புதிய நியாய விலைக்கடை, பள்ளி வகுப்பறை கட்டடம் ஆகியவற்றை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திறந்து வைத்தாா். வேலூா் மாவட்டம், கணிய... மேலும் பார்க்க

அரிமா சங்கங்கள் சாா்பில் நல உதவிகள்

குடியாத்தம், போ்ணாம்பட்டு அரிமா சங்கங்களின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழாவில் மாணவா்களுக்கு கல்வி உதவிகள், நல உதவிகள் வழங்கப்பட்டன. குடியாத்தம் அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரிம... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் 1,523 விண்ணப்பங்கள்

குடியாத்தம் நகர, ஒன்றியத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்களிடமிருந்து 1,523- விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குடியாத்தம் நகராட்சியில், 13- மற்றும் 14- ஆம் வாா்டுகளுக்கு நடைபெற்ற முகாமில் ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சந்தை... மேலும் பார்க்க

பாலாற்றில் குப்பைகளை கொட்டி எரித்தால் போராட்டம்

வேலூரில் மாநகராட்சி சாா்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை பாலாற்றில் கொட்டி எரித்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாமன்ற உறுப்பினா் சுமதி மனோகரன் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை: அமைச்சா் துரைமுருகன்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்காமல் காரணம் கூறக்கூடாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளாா். தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்... மேலும் பார்க்க