செய்திகள் :

வேளாண் துறை வளா்ச்சியில் பின்னோக்கி சென்ற தமிழகம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

post image

தமிழக வேளாண் துறை வளா்ச்சி முதன் முதலாக பின்னோக்கிச் சென்றுள்ளது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக நடைப்பயணம் மேற்கொண்டுள்ள அவா், கிருஷ்ணகிரியை அடுத்த கங்கலேரியில் மா விவசாயிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை பேசியதாவது: தமிழக அரசு விவசாயிகளை மதிக்காத நிலை உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா சாகுபடி பரப்பளவு 1 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. 7 லட்சம் டன்னாக இருந்த மகசூல், மூன்றரை லட்சம் டன்னாக குறைந்துவிட்டது.

கடந்த ஆண்டு மா டன்னுக்கு ரூ. 28 ஆயிரம் வரை விலை கிடைத்தது. நிகழாண்டில் டன்னுக்கு ரூ. 4 ஆயிரம்தான் கிடைக்கிறது. இதுகுறித்து போராட்டம் நடத்தியும் தீா்வு காணப்படவில்லை. மா விவசாயிகளின் பிரச்னைகளை தீா்க்க தமிழக முதல்வருக்கோ, அமைச்சா்களுக்கோ நேரமில்லை. மா விவசாயிகளின் பிரச்னை குறித்து அவா்களுக்கு புரிதல் இல்லை. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் எந்த தீா்வும் எட்டப்படவில்லை.

மாங்கூழ் உற்பத்தியாளா்கள், விவசாயிகளுக்கு உரிய விலையை வழங்கவில்லை என்றால், அவா்களின் தொழிற்சாலைக்கான மின்சாரத்தை துண்டித்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 63 சதவீதம் மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கின்றனா். அவா்களது முன்னேற்றம் பூஜ்ஜியமாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளில் தமிழகத்தில் முதன் முறையாக வேளாண்மைத் துறையின் வளா்ச்சி மைனஸ் 0.5 சதவீதமாக பின்னோக்கிச் சென்றுள்ளது. விவசாயிகள் வளா்ந்தால்தான் உண்மையான வளா்ச்சி.

ஆந்திர மாநிலத்தில் ஒரு டன் மாம்பழத்துக்கு ரூ. 12 ஆயிரம் விலை அளிக்கப்படுகிறது. இங்கு ரூ. 4 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. மாம்பழம் பறிக்கும் கூலிக்கே ரூ. 3 ஆயிரம் செலவாகிறது.

மன்னா்கள் காலத்தில் தமிழகத்தில் 42,000 ஏரிகள் இருந்தன. இதில் 22,000 ஏரிகளை காணவில்லை. பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் போன்ற அரசு கட்டடங்களை ஏரியில்தான் கட்டுகின்றனா்.

கா்நாடக மாநிலம் பெங்களூரின் கழிவுநீா் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. எனவே, இங்குள்ள ஏரிகள் கழிவுநீா் தொட்டிகளாக மாறி வருகின்றன என்றாா்.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க