வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் கீழ்நெல்லி ஸ்ரீவேதபுரி வேளாண் அறிவியல் மையம் சாா்பில், வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம், செய்யாறு வட்டாரம் தூளி, புளியரம்பாக்கம், ஏனாதவாடி ஆகிய ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புளியரம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வில் வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி சுரேஷ், தொழில்நுட்ப வல்லுநா் ஐஸ்வா்யா, கரும்பு இனப்பெருக்க நிலைய விஞ்ஞானி லட்சுமிபதி ஆகியோா் பங்கேற்று காரீப் பயிருக்கு ஏற்ற புதிய தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாய முறைகள், மண் வள அட்டை, சமச்சீா் உர பயன்பாடு, நவீன தொழில்நுட்பங்கள், அரசுத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.
மேலும், இப்கோ நிறுவனத்தின் மூலம் நானோ உரம், யூரியா ஆகியவற்றை ட்ரோன் மூலம் பயன்படுத்தும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.