செய்திகள் :

ஷிண்டே அணி எம்எல்ஏவுக்கு மகாராஷ்டிர முதல்வர் கண்டனம்!

post image

சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், உணவக ஊழியரைத் தாக்கியதற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்கியுள்ளார்.

நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு எம்எல்ஏ விடுதி உணவகத்தில் கெட்டுப்போன உணவு அளித்ததாக உணவக சமையல்காரரை சரமாரியாக தாக்கினார்.

இதுதொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வைரலான நிலையில், தான் செய்தது தவறல்ல என்றும் இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் சஞ்சய் ஜெய்க்வாட் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், இதுபோன்ற நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சஞ்சய் ஜெய்க்வாட்டுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், கெய்க்வாட்டின் நடவடிக்கை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளது, மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Maharashtra Chief Minister Devendra Fadnavis has condemned Shiv Sena MLA Sanjay Gaikwad for attacking a restaurant worker.

இதையும் படிக்க : கெட்டுப்போன உணவு! உணவக ஊழியரைத் தாக்கிய சிவசேனை எம்எல்ஏ!

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ -முதல்வா் கண்டனம்

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தோ்தல் முறைகேட்டை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடு நடைபெற்றது; பிகாா் தோ்தலிலும் அதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்களவை எதிா... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ஊடுருவல்கள்: பஞ்சாப், ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை

அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் மக்களை ‘டாங்கி ரூட்’ எனும் ஆபத்தான வழியில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத் துறை புத... மேலும் பார்க்க

யூரியா பயன்பாடு அதிகரிப்பால் மண்வளம் பாதிக்கும் - மத்திய அமைச்சா்

தெலங்கானாவில் யூரியா உரப் பயன்பாடு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மத்திய உரத்துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா, இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தாா். தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அம... மேலும் பார்க்க