செய்திகள் :

ஃபிளிப்கார்டில் ஆப்பிள் ஐஃபோன் 16 விலையில் மாபெரும் தள்ளுபடி!

post image

ஆப்பிள் ஐஃபோன் 17 வரிசைகள் அறிமுகம் ஆவதற்கான நாள்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஐஃபோன் 16 மாடல்களின் விலைகளில் மாபெரும் தள்ளுபடிகளை ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ரூ.17 ஆயிரம் வரை அமேஸான் தள்ளுபடி அறிவித்திருந்த நிலையில், இந்த போட்டியில் ஃபிளிப்கார்ட் இணைந்துள்ளது.

ஆப்பிள் ஐஃபோன் 17 வரிசைகளை வாங்குவதற்காக காத்திருந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் திருவிழாப்போலத்தான். ஆனால், புதிய மாடலை வாங்கும் அளவுக்கு பணம் செலவிட விரும்பாதவர்களுக்கும், பழைய மாடல் விலைத் தள்ளுபடியால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமேஸானில் ஐஃபோன் 16 ரூ.69,999க்கு அதாவது 12 சதவீத தள்ளுபடியுடன் விற்பனையாகிறது. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் ரூ.3000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

அது மட்டுமல்லாமல் நல்ல நிலையில் உள்ள ஐஃபோன் மாடல்களைக் கொடுத்து புதிய போன் வாங்கினால் ரூ.36,050 கூடுதல் தள்ளுபடியாகவும் கிடைக்கும். எனவே, அமேஸான் டீல் மூலம் ரூ.40 ஆயிரத்துக்கும் குறைவாகக் கூட ஐஃபோன் வாங்க முடியும்.

ஃபிளிப்கார்டில் 10 சதவீத விலைத் தள்ளுபடியுடன் ரூ.71,399க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதில்லாமல், சில வங்கிகளின் கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கினால் அதற்கு கூடுதல் சலுகையும் கிடைக்கும்.

மேலும், இஎம்ஐ கட்டணம் இல்லை, பழைய ஐஃபோன் மாடலைக் கொடுத்து புதிய போன் வாங்கினால் அதற்கு ரூ.61,700 வரை தள்ளுபடி என மிகப்பெரிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, புதிய மாடல் ஐஃபோன்களை வாங்க வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு இதுதான் ஜாக்பாட். புதிய வரவுகளால் பழைய மாடல்களின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த செப்டம்பரில், ஐஃபோன் 17 வரிசையில் நான்கு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன. ஐஃபோன் 17, ஐஃபோன் 17 ஏர், ஐஃபோன் 17 ப்ரோ மற்றும் ஐஃபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் அறிமுகம் செய்யவிருக்கிறது.

As the days are counting down to the launch of Apple's iPhone 17 series, Flipkart has announced huge discounts on the prices of iPhone 16 models.

இதையும் படிக்க... நிலநடுக்கத்தால் கிழக்கு ஆப்கன் கிராமங்கள் தரைமட்டம்! உதவி கோரி மக்கள் கதறல்!!

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

நேற்று பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்த நிலையில் இன்றும்(வியாழக்கிழமை) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் த... மேலும் பார்க்க

செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

புதுதில்லி: இன்றைய வர்த்தகத்தில் உலோகப் பங்குகள் உயர்ந்து, பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த ஏற்றத்திற்கு உறுதுணையாக இருந்தது. இதனையடுத்து டாடா ஸ்டீல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.டாட... மேலும் பார்க்க

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

புதுதில்லி: பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர். அதே வேளையில் அதன் ஐபிஓ 7.13 முறை அதிக சந்தா வசூலிக்கப்பட்டதாக என்எஸ்இ-யின் தரவுகளை மேற்கோள் காட்டி நிறுவனம் தெர... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அமெரிக்க டாலர் குறியீட்டெண் பலவீனம் ஆகிய காரணங்களால், இன்றைய டாலருக்கு நிகரான இந்திய ரூ... மேலும் பார்க்க

நிலையற்ற வர்த்தகத்தில் தொடங்கி உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!

மும்பை: உலோகப் பங்குகளின் ஏற்றம் தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்த அதீத நம்பிக்கையால், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்... மேலும் பார்க்க