செய்திகள் :

அக்னி நட்சத்திரம் தொடங்கியது! வெளியானது மழைப்பொழிவு நிலவரம்!!

post image

சென்னை: வெய்யில் இப்படி கொளுத்துகிறதே என்று புலம்பிவந்த தமிழக மக்களுக்கு அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது என்று தெரிந்தபோதே வெப்பத்துக்கு இணையாக அச்சமும் அதிகரித்தது.

இதோ அதோ என்று சொல்லிவந்த அக்னி நட்சத்திரமும் மே 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவிட்டது. மதியம் 12 மணிக்கு வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெப்பமும் கொளுத்தியது. பொது இடங்களிலும் வழக்கமாக இருப்பது போல் அல்லாமல் மக்களின் நடமாட்டமும் குறைந்தே காணப்பட்டது.

ஆனால், நிலைமை சற்று நேரத்துக்கெல்லாம் மாறியது. பிற்பகல் 3 மணிக்கெல்லாம் வானம் மேகமூட்டமாக மாறியது. சூறாவளிக் காற்றும் வீசத் தொடங்கியது. வெய்யிலுக்காக வீட்டுக்குள்ளே முடங்கியவர்கள், வானிலை மாற்றத்தைக் கண்டு வியந்தனர். 3.30 மணிக்கு சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

வெறுமனே தூறுல் போட்டுவிட்டு ஏமாற்றிவிடாமல் ஒரு மணி நேரத்துக்கும் மேல் மழை பெய்து தரையை ஈரமாக்கிச் சென்றது.

நேற்று நீட் தேர்வு என்பதால், பிள்ளைகளை தேர்வு மையத்துக்குள் விட்டுவிட்டு, நிழலுக்கு ஏதேனும் கூரை கீழே நின்றிருந்தவர்களின் நிலைதான் மோசமானது.

இந்த நிலையில்தான் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பதிவான மழைப்பொழிவு ( மில்லி மீட்டரில் ) நிலவரம் வெளியாகியிருக்கிறது.

அதன்படி,

ராமேஸ்வரம் - 89 மி.மீ.

மத்தூர் (கடலூர்) - 87 மி.மீ.

விருத்தாசலம் - 87 மி.மீ.

சீர்காழி - 84.6 மி.மீ.

வேப்பூர் (கடலூர்) - 75 மி.மீ.

குப்பநத்தம் (கடலூர்) - 72.8 மி.மீ.

புள்ளம்பாடி (திருச்சி)- 72.6 மி.மீ.

பரங்கிப்பேட்டை (கடலூர்) - 72.2 மி.மீ.

உப்பாறு அணை (திருப்பூர்) - 69 மி.மீ.

சின்னக் கல்லார் (கோவை) - 49 மி.மீ.

மாமல்லபுரம் - 48 மி.மீ.

தம்மம்பட்டி (சேலம்) - 48 மி.மீ.

ஆவடி (திருவள்ளூர்) - 48 மி.மீ.

அண்ணாமலை நகர் (கடலூர்) - 46.4 மி.மீ. என மழைப் பதிவாகியுள்ளது.

சென்னையிலேயே பலத்த மழை பெய்ததாக நினைத்தாலும். இந்தப் பட்டியலில் சென்னையே இடம்பெறாத வகையில் மற்ற மாவட்டங்களில் குறிப்பாக கடலூரில் பலத்த மழைப் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள... மேலும் பார்க்க

மே 5 வணிகர் நாளாக அறிவிக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மே 5 ஆம் தேதி வணிகர் நாளாக விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வணிகர் சங்க கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் இன்று (மே 5) நடைபெற்றது. இதில், முதல்வர... மேலும் பார்க்க

நம்முடைய களம் பெரிது - பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! - முதல்வர்

நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற “தம... மேலும் பார்க்க

இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அன்பில் மகேஸ்

சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 1,008 சம்ஸ்கிருத உரையாடல் ... மேலும் பார்க்க

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை நீட்டிப்பு!

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் விதித்தத் தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது. கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவு... மேலும் பார்க்க

கோவை - திருப்பூர் எல்லை வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான சுல்தான்பேட்டை அருகே மல்லேகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் வெடிமருந்து ஆலையில் இன்று (மே 5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டைச் சே... மேலும் பார்க்க