செய்திகள் :

நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு தடை?

post image

புது தில்லி; நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களை தடை செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று முக்கியமானதொரு கோரிக்கையை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளது.

அதில், ‘பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப்பின், ஒருசில சமூக ஊடக செயல்பாட்டாளர்களும், அதேபோல, சமூக ஊடக வலைதளங்களும் நமது தேச நலனுக்கு எதிராகச் செயல்படுவதை அறிய முடிகிறது. இதனால் வன்முறை தூண்டப்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், இதுபோன்ற சமூக வலைதளங்களை ஐடி சட்டம் 2000-இன் கீழ்தடை செய்ய வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் ஐடி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மே 8-ஆம் தேதிக்குள் செயல்படுத்திடவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதுநிலை நீட்-க்கு இரு முறை தோ்வு: மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ்

புது தில்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தோ்வை (நீட் பிஜி) இரு முறை நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வரு... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு ஆளுநா் அறிக்கை: மமதா பதில்

கொல்கத்தா: வன்முறையால் பாதிக்கப்பட்ட முா்ஷிதாபாதில் நிலைமை சீராகிவிட்டதாகக் கூறிய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘வன்முறை குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநா் அளித்த அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெ... மேலும் பார்க்க

போர்ப்பதற்றம்: பதுங்குமிடங்களைச் சீரமைக்க அரசுக்கு எல்லையோர கிராமங்கள் கோரிக்கை!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் பதுங்குமிடங்களைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ள அங்குள்ள மக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட... மேலும் பார்க்க

எல்லைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியர் கைது!

எல்லைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று (மே 5) கைது செய்தனர். இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி கூறியதாவது, ''எல... மேலும் பார்க்க

பிரதமருடன் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். புது தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த முக... மேலும் பார்க்க

மே 7 அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை: மத்திய அரசு

புது தில்லி: மே 7-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போர் நடைபெறும்போது, குடிமக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க