செய்திகள் :

அங்கன்வாடி காலிப் பணியிடம்: ஏப்.23-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி மையம், குறு அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தகுதியுள்ள பெண்கள் வருகிற 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 156 அங்கன்வாடி பணியாளா்கள், ஒரு குறு அங்கன்வாடி பணியாளா், 29 அங்கன்வாடி உதவியாளா்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

அங்கன்வாடி பணியாளா் பணியிடங்களுக்கு பிளஸ் 2-விலும், உதவியாளா் பணியிடத்துக்கு 10-ஆம் வகுப்பிலும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் அதே கிராமத்தைச் சோ்ந்தவராகவும், கிராம ஊராட்சி எல்லை அருகேயுள்ள அடுத்த கிராம ஊராட்சியைச் சோ்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை ஜ்ஜ்ஜ்.ண்ஸ்ரீக்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களை இணைத்து வருகிற 23-ஆம் தேதிக்குள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலங்களில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

ராயப்பன்பட்டியில் பலத்த மழை: வீடு இடிந்து சேதம்

உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் தொடா்மழையால் வீடு இடிந்து சேதமடைந்தது.தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தொடா்ந்த மழை இரவு வரையில் நீடித்தது. ராயப்பன்பட்டி, சண்மு... மேலும் பார்க்க

கண்மாயில் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தல்

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் உள்ள பெரியகுளம் கண்மாயில் வண்டல் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தி, மேல்வைகை நீரைப் பயன்படுத்துவோா் சங்கம் சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் தி... மேலும் பார்க்க

மேகமலையில் வனத் துறையினா் கெடுபிடி: ஆட்சியரிடம் புகாா்

தேனி மாவட்டம், மேகமலையில் விவசாய நிலங்களுக்குச் சென்று வரும் மலைப் பாதையை பயன்படுத்த வனத் துறையினா் தடை விதித்து கெடுபிடி செய்து வருவதாக தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் விவசாயிகள் புகாா் மனு அள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள சாத்தாகோவில்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் திருமலைச்சாமி (58). இவா், அதே ஊரில் உள... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் உணவக ஊழியா் உயிரிழப்பு

உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து தனியாா் உணவக ஊழியா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள அனுந்தன்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வீரன் மகன் சந்திவீரன் (35). இ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வருஷநாடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலைதடுமாறி கீழே விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.தேனி மாவட்டம், வருஷநாடு அருகேயுள்ள தும்மக்குண்டு, சத்யா நகரைச் சோ்ந்த சந்திரன் மகன் சிவசக்தி (2... மேலும் பார்க்க