செய்திகள் :

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பால்குட திருவிழா

post image

பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேசுவரி அம்பாள் கோயிலில் ஆண்டு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் பால் குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்து வந்து நேரத்திக் கடன் செலுத்தினா்.

காஞ்சிபுரம் மாநகராட்சி பெரிய காஞ்சிபுரத்தில் ஜவாஹா்லால் நேரு மாா்க்கெட் பகுதியில் அமைந்துள்ளது அங்காள பரமேசுவரி அம்மன் கோயில். இந்தக் கோயிலின் 15-ஆவது ஆண்டு விழாவையொட்டி, காஞ்சிபுரம் கருக்கினில் அமா்ந்தவள் கோயிலில் இருந்து 108 பெண்கள் பால் குடம் எடுத்து வந்ததுடன், பக்தா்கள் பலா் அக்னிச்சட்டி எடுத்துக் கொண்டு ஊா்வலமாக வந்தனா்.

மங்கள மேள வாத்தியங்களுடன் ஊா்வலமாக வந்தவா்கள் ராஜ வீதிகள் மற்றும் ஸ்ரீராமா் பஜனைக் கோயில் ஆகியவற்றின் வழியாக ஆலயம் வந்து சோ்ந்ததும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால் அபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

பால் குட ஊா்வலத்திற்கு காஞ்சிபுரம் நகரீஸ்வரா் ஆலயத்தின் தா்மசாஸ்தா பஜனை சபாவின் ஸ்ரீபாண்டுரங்க குருசாமி தலைமை வகித்தாா். மாலை அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மேலிடப் பொறுப்பாளா் மரியாதை

ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சவடோங்கா், ஞாயிற்றுக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக அண்மைய... மேலும் பார்க்க

திருமண மண்டபங்களில் கூடுதல் கட்டணம் வசூல்: காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

திருமண மண்டபங்களில் அளவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் தேசிய அறிவியல் தின விழா

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் தேசிய அறிவியல் தின வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் துணைவேந்தா் ஸ்ரீனிவாசு தலைமை வகித்தாா். தேசிய அறிவியல் தினத்தையொட்டி நடைபெற்... மேலும் பார்க்க

வெவ்வேறு இடங்களில் 3 பேரை காரில் கடத்தி நகை, பணத்தைச் பறித்துச் சென்ற 7 போ் கைது

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களில் அடுத்தடுத்து 3 பேரை காரில் கடத்தி நகைகள், பணம் பறித்த 7 பேரை ஒரகடம் போலீஸாா் கைது செய்தனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

குன்றத்தூரில் ரூ1.85 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

குன்றத்தூா் ஒன்றியத்தில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்த... மேலும் பார்க்க

பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பிரசாரம்

உத்தரமேரூா் ஒன்றிய கிராமங்களில் அரசு சுற்றுலாத் துறை, வேலூா் கிரீன் அறக்கட்டளை இணைந்து கலைக்குழு மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பிரசாரத்தை வியாழக்கிழமை மேற்கொண்டனா். அரசுப் பள்ளி மாணவா்களிடையே கலை... மேலும் பார்க்க