செய்திகள் :

அஜர்பைஜான் - ஆர்மீனியா மோதல்! மத்தியஸ்தம் செய்த டிரம்ப்புக்கு நோபல் வழங்க கோரிக்கை!

post image

அஜர்பைஜான் - ஆர்மீனியா மோதலை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜர்பைஜான் - ஆர்மீனியா இடையேயான நீண்டகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், வெள்ளைமாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டு பிரகடனம் என்ற ஆவணத்தில் டிரம்ப் உள்பட அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், ஆர்மீனியா பிரதமர் நிகோல் பாஷினியன் மூவரும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்போது, டிரம்ப் பேசுகையில், இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளும் போரை நிறுத்திக் கொள்ளவும், வர்த்தகம் மற்றும் பயணம், நட்புறவு, ஒருவருக்கொருவர் இறையாண்மையை மதிக்கவும் உறுதிபூண்டுள்ளனர்.

இரு தலைவர்களும் சிறந்த நட்புறவைக் கொண்டிருப்பர். மோதல் ஏதேனும் ஏற்பட்டாலும், என்னை அழைப்பார்கள்; நாங்கள் அதனைச் சரிசெய்வோம் என்று தெரிவித்தார்.

இதனிடையே, டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட வேண்டும் என்று இருநாட்டுத் தலைவர்களும் கோரினர்.

``சமாதானத்தைக் கொண்டுவரும் டிரம்ப் இல்லாமல், இந்த முன்னேற்றம் (போர்நிறுத்தம்) சாத்தியமில்லை. நோபல் பரிசுக்கு தகுதியானவர் டிரம்ப். அவருக்கு இல்லையென்றால், அமைதிக்கான நோபல் பரிசுக்கு யார் தகுதியானவர்கள்?’’ என்று இருநாட்டுத் தலைவர்களும் கூறினர்.

மேலும், இதுகுறித்து நோபல் குழுவுக்கு ஒரு கூட்டு முறையீட்டை அளிக்கவும் முன்வந்தனர்.

Azerbaijan and Armenia sign peace deal at White House summit

புதின் - டிரம்ப் பேச்சு: ரஷியா, உக்ரைன், அமெரிக்கா நிலைப்பாடு என்ன?

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷிய அதிபா் புதினுடன் அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரஷியா, உக்ரைன், அமெரிக்கா மூன்று நாடுகளும... மேலும் பார்க்க

ஆப்கனில் ஐ.நா. பணியிலுள்ள பெண்களுக்கு கொலை மிரட்டல்: தலிபான் அரசு விசாரணை!

ஆப்கானிஸ்தானில் தங்களின் அமைப்பில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, இதுதொடா்பாக தலிபான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.410 கோடி இழப்பு!

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், அந்நாட்டுக்கு 2 மாதங்களில் ரூ.410 கோடி (பாகிஸ்தான் ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல... மேலும் பார்க்க

மருத்துவர்களை விட ஏஐ சிறந்தது: எலான் மஸ்க்

மருத்துவர்களை விட செய்யறிவு தொழில்நுட்பம் சிறந்தது என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மருத்துவ துறையில் மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒன்றாக செய்யறிவு தொழில்நுட்பம் மேம்ப... மேலும் பார்க்க

டிரம்ப் விருந்துக்கு மறுப்பு! அமெரிக்க வரலாற்றை மாற்றியமைக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட ஆஸ்கர் நடிகை!

ஒருநாள் இரவு விருந்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைத்ததாக பிரிட்டிஷ் நடிகை கூறியது பேசுபொருளாகியுள்ளது.ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் பிரிட்டிஷ் நடிகை எம்மா தாம்சனுக்... மேலும் பார்க்க

காஸாவின் விடுதலையே இஸ்ரேலின் இலக்கு! - நெதன்யாகு

காஸாவில் இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார்.ஜெருசலேமில் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “எங்களது குறிக்கோள் காஸாவை கையகப்படுத்து... மேலும் பார்க்க