செய்திகள் :

அஜித்குமார் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரளித்த நிகிதாவிடம் `3' மணி நேரம் நீண்ட சிபிஐ விசாரணை!

post image

அஜித்குமார் கொலை வழக்கில், திருமங்கலம் பேராசிரியை நிகிதாவிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றிருக்கிறது.

அஜித்குமார் கொலை வழக்கு

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் அளித்த நகைத் திருட்டுப் புகாரில் கடந்த 27 ஆம் தேதி திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற நிலையில்... மானாமதுரை டி.எஸ்.பி-யின் தனிப்படையினர் அஜித்குமாரை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று பல இடங்களில் வைத்து தாக்கியதில் உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த, இந்த வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். டி.எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சிவகங்கை எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டார்.

பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள். தொடர்ந்து, இதுகுறித்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றியதாக தெரிவித்தது.

நிகிதா

இதனையடுத்து டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த 14 ஆம் தேதி விசாரணையைத் தொடங்கினர். திருப்புவனம், மடப்புரம் கோயில் உட்பட அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, திருப்புவனம் காவல் நிலையத்திலும் ஆய்வு செய்தனர். அஜித்குமாருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சக ஊழியர்கள், நண்பர்கள், கோயில் அலுவலர், ஊழியர், அரசு மருத்துவர்கள், காவல்துறையினர், அஜித்குமார் குடும்பத்தினர் என அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் 11 ஆவது நாளான இன்று இவ்வழக்கின் முக்கிய சாட்சியும், நகை காணாமல் போனதாக புகாரளித்தவருமான மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை நிகிதா, அவரது தாயார் சிவகாமி ஆகிய இருவரிடமும் மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடந்தது.

கடந்த 27 ஆம் தேதி நிகிதா தாயாருடன் காரில் எங்கெங்கு சென்றார்? மருத்துவமனைக்கு சென்றாரா? நகைகளை எந்த இடத்தில் வைத்து கழற்றினார்? என்னென்ன வகையிலான நகைகள்... அவற்றுக்கான ரசீது, நகை காருக்குள் வைக்கப்பட்ட இடம் குறித்தும், கோயிலில் என்ன நடந்தது? அஜித்குமாரிடம் பேசியது என்ன ? திருப்புவனம் காவல் நிலையத்தில் என்ன நடந்தது? நிகிதா யார் யாருடன் மொபைலில் பேசினார்? என்பது குறித்தும் பல கேள்விகளை சிபிஐ அதிகாரி மோஹித்குமார் தலைமையிலான குழுவினர் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

மூன்று மணி நேரத்துக்கு மேலாக நடந்து விசாரணைக்குப் பின் நிகிதாவும் அவர் தாயாரும் கிளம்பிச் சென்றார்கள்.

கோவை: `திருமணம் தாண்டிய உறவுக்கு தடை' - 4 வயது மகளை கொலை செய்த பெண் கைது

கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (30). இவர் கட்டுமானப் பணியில் சித்தாளாக பணியாற்றி வருகிறார். தமிழரசிக்கும், ரகுபதி (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த ... மேலும் பார்க்க

காதலிக்காக மனைவிக்கு விவாகரத்து: சொத்துடன் வராததால் காதலனை கொடூரமாக அடித்து தெருவில் போட்ட காதலி..

மும்பை தாதரில் வசிப்பவர் ரஞ்சித் தேஷ்முக் (48). ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். அதோடு அரசு நிறுவனம் ஒன்றில் பாய்லர் ஆப்ரேட்டராகவும் இருக்கிறார். இவருக்கு ஷில்பா(51) என்ற பெண்ணுடன் தொடர்ப... மேலும் பார்க்க

3 வயது ஆண் குழந்தை; 12 லட்சத்திற்கு விற்க முயற்சி; 3 பெண்கள் கைது - பின்னணி என்ன?

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை ஒன்று விற்பனைக்கு உள்ளது என்றும், ரூ.12 லட்சம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். இதன... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் சந்தேகப்படும் நபரை நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது காவல்துறை. ஜூலை மாதம் 12-ம் தேதி, பள்ளிக்குச் செ... மேலும் பார்க்க

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க