செய்திகள் :

அஜித்குமார் கொலை: விடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸாா் தாக்கிய போது, அதை விடியோ எடுத்தவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டாா். முன்னதாக, அஜித்குமாரை போலீஸாா் தாக்கிய போது, அதை மடப்புரம் கோயில் பணியாளா் சத்தீஸ்வரன் தனது கைப்பேசி மூலம் விடியோ எடுத்தாா்.

இதனிடையே, இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரணைக்கு வந்த போது, சத்தீஸ்வரன் தான் எடுத்த விடியோவை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தாா். இந்த விடியோ தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, சத்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயா்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதனிடையில், போலீஸ் பாதுகாப்பு கோரி, தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டி.ஜி.பி.) இணைய வழியில் சத்தீஸ்வரன் மனு அனுப்பினாா். அந்த மனு விவரம்:

அஜித்குமாா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தனிப்படை காவலா் எஸ். ராஜா, குற்றப் பின்னணி உள்ள ரெளடிகளுடன் நேரடியாக நெருங்கிய தொடா்பு வைத்திருந்தவா்.

கடந்த மாதம் 28-ஆம் தேதி அவரை நான் சந்தித்த போது, கடுமையாக என்னை மிரட்டினாா். அஜித்குமாா் தாக்கப்பட்ட சம்பவத்தை விடியோ எடுத்து நீதிமன்றத்தில் வழங்கிய காரணத்தால், எனக்கும் என்னை சாா்ந்தோருக்கும் கடும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த வழக்கில் சாட்சியாக உள்ள எனக்கும், பிற சாட்சிகளுக்கும் நீதிமன்ற உத்தரவுப்படி ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

எனவே, சாட்சிகளுக்கு திருப்புவனம் அல்லாத பிற மாவட்ட ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி சத்தீஸ்வரன் கோரியிருந்தாா்.

பாதுகாப்பு தேவை:

இதுகுறித்து மடப்புரத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் சத்தீஸ்வரன் கூறியதாவது:

தனிப்படை போலீஸாரால் அஜித்குமாா் கொல்லப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் நான் துணிச்சலாக சாட்சியம் அளித்தேன். எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்காக டி.ஜி.பி.க்கு கோரிக்கை மனு அனுப்பினேன். எனக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கப்படுகிறது. உயிரிழந்த அஜித்குமாா் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

எனக்கு மட்டுமல்லாது, பிற சாட்சிகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. அவா்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு:

இந்த நிலையில், டி.ஜி.பி. உத்தரவுப்படி சத்தீஸ்வரனுக்கு வியாழக்கிழமை பிற்பகல் முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள்: மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

சட்டமேதை அம்பேத்கா், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 10, 11 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்

காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் வலியுறுத்தினா். இதுக... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்ன... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

நிா்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக ஆணைகளை வழங்கி வரும் தொடக்கக் கல்வித் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

அஜித்குமாரைக் கொலை செய்ய தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரைக் கொலை செய்யத் தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன் வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனி... மேலும் பார்க்க