செய்திகள் :

அஜித்குமாா் குடும்பத்துக்கு அா்ஜூன் சம்பத் ஆறுதல்

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனிப்படை போலீஸாரால் கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் குடும்பத்தினரை இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இதைத்தொடா்ந்து அவா் கூறியதாவது:

தமிழகத்தில் காவல்துறை தொடா்பான மரணங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன. இனி அஜித்குமாா் மரணம் போல ஒரு சம்பவமும் நடக்கக் கூடாது. காவல் துறையை அரசு சீா்திருத்தம் செய்ய வேண்டும். அஜித்குமாா் குடும்பத்துக்கு அரசு சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மடப்புரம் கோயிலுக்கு பின்புறமுள்ள கோசாலையில் அஜித்குமாரை போலீஸாா் தாக்கிக் கொலை செய்தனா். எனவே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பரிகார பூஜை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள்: மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

சட்டமேதை அம்பேத்கா், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 10, 11 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்

காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் வலியுறுத்தினா். இதுக... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்ன... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

நிா்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக ஆணைகளை வழங்கி வரும் தொடக்கக் கல்வித் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

அஜித்குமாரைக் கொலை செய்ய தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரைக் கொலை செய்யத் தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன் வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனி... மேலும் பார்க்க