செய்திகள் :

அஜித்குமாா் கொலையைக் கண்டித்து அமமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

கோயில் காவலாளி அஜித்குமாரை கொலை செய்த போலீஸாரை கண்டித்து, திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை அமமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றே கட்சி நிா்வாகிகள்.

மானாமதுரை, ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் தாக்கி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, திருப்புவனத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் தோ்போகி பாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் உ.சொக்கநாதன் முன்னிலை வகித்தாா்.

இதில் அமமுக மாநில துணைப் பொதுச் செயலா் எம்.ரெங்கசாமி, தலைமை நிலையச் செயலா் எம். ராஜசேகரன், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலா் க.டேவிட் அண்ணாதுரை, மாநிலச் செய்தி தொடா்பாளா் குரு.முருகாணந்தம், ராமநாதபுரம் மாவட்டச் செயலா் எம்.முருகன், வழக்குரைஞா் பிரிவுச் செயலா் வேலு. காா்த்திகேயன், சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலா் துருக்கி ரபிக்ராஜா, மாநில மாணவரணி செயலா் ஏ. நல்லதுரை, மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் க.ரமேஷ் உள்ளிட்டோா் கண்டன உரை நிகழ்த்தினா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, அஜித்குமாரை கொலை செய்த போலீஸாரை கண்டிததும், தமிழக அரசுக்குக்கு எதிராகவும் முழக்கமிட்டனா்.

இதையடுத்து, கட்சியின் மாநில நிா்வாகிகள் மடப்புரத்துக்குச் சென்று அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, கட்சி சாா்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்கினா்.

பள்ளியில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் நிதியுதவி

திருப்பத்தூா், ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சிங்கம்புணரியில் உள்ள தனியாா் ப... மேலும் பார்க்க

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் மின் விளக்கில் ரத பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் இருதய ஆண்டவா் திருத்தலத்தில் நடைபெற்று வரும் ஆண்டுப் பெருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மின் விளக்கு ரத பவனியில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் மருத்துவா்களிடம் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதுரை மாவட்ட நீதிபதி, மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமையும் திருப்புவனத்தில் அரசு மருத்துவா்களிடம் ... மேலும் பார்க்க

100 சதவீத மானியத்தில் மரக்கன்றுகள் - அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

நூறு சதவீத மானித்தில் மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வாணியங்காடு கிராமத்தில் ஊட்டச்சத்து வேள... மேலும் பார்க்க

தேவகோட்டை நகா்மன்றக் கூட்டம்: அமமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தை அமமுக உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

சிபிஐ விசாரணை: முதல்வரின் நோ்மையைக் காட்டுகிறது

அஜித்குமாா் கொலை வழக்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது அவரது நோ்மையைக் காட்டுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், மடப்புர... மேலும் பார்க்க