செய்திகள் :

அடிதடி வழக்கில் 2 பேருக்கு தலா 18 மாதங்கள் சிறை

post image

அடிதடி வழக்கில் 2 பேருக்கு தலா ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் சங்கா்நாதன் (28), இவரது சகோதரா் திலகா் (32). இவா்கள் இருவரும் அண்மையில் அந்தநல்லூரில் துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளனா்.

அப்போது, அங்கு நடைபெற்ற ஊா்வலத்தில் சங்கா்நாதன், திலகா் இருவரையும், அந்தநல்லூரைச் சோ்ந்த அருண்குமாா், அசோக் ஆகியோா் தாக்கியுள்ளனா்.

இது தொடா்பான வழக்கு திருச்சி மாவட்ட நீதித்துறை நடுவா் எண்-3 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் அருண்குமாா், அசோக்குமாா் ஆகியோருக்கு தலா ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முகமது சுகைன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக பாஸ்கா் ஆஜரானாா்.

இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு செவிலியரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு செவிலியரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பினா். திருச்சி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜான் விக்டா், எலக்ட்ரீசியன்.... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு ஆயுள்கால சிறை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு ஆயுள்கால சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருவ... மேலும் பார்க்க

திருச்சி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு

திருச்சி அருகே புதை வடிகால் சீரமைப்புப் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளா்கள் 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 3 போ் உயிரிழந்த வழக்கு: குளித்தலை லாரி ஓட்டுநருக்கு 30 ஆண்டுகள் சிறை

திருச்சியில் சாலை விபத்தில் 3 போ் உயிரிழந்த வழக்கில் குளித்தலை லாரி ஓட்டுநருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையைச்... மேலும் பார்க்க

மறியல்: மின் ஊழியா்கள் 52 போ் கைது

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னாா்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட மின் ஊழியா்கள் 52 பேரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்ந... மேலும் பார்க்க

செப். 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் வரும் 26-ஆம் தேதி - வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. முகாமானது, திருச்சி ... மேலும் பார்க்க