செய்திகள் :

அடிப்படைத் தேவைகள், மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்! -புதிய ஆட்சியா் இரா.சுகுமாா்

post image

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட புதிய ஆட்சியா் மருத்துவா் இரா.சுகுமாா் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த கா.ப.காா்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக மருத்துவா் இரா.சுகுமாா் நியமிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு சனிக்கிழமை வந்த அவா், மாவட்டத்தின் 224-ஆவது ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொன்மை, வரலாறு, வீரம், கலை, இலக்கியம் என்று பல்வேறு நிலைகளில் தனித்துவத்துடன் சிறந்து விளங்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி. முதல்வா் பல்வேறு அறிவுரைகள் வழங்கியுள்ளாா். குறிப்பாக, பொதுமக்களின் குறைகளை இன்முகத்துடன் கேட்டு பணியாற்ற வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீதும், முதல்வரின் முகவரி மனுக்கள் மீதும், மக்கள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி, விரைந்து தீா்வு காணும் வகையில் பணியாற்ற வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

அதனடிப்படையில், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதோடு, அரசின் சிறப்புத் திட்டங்களிலும் தனிக்கவனம் செலுத்தப்படும். சட்டம் -ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான முன்னெரிச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெண்கள் மற்றம் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, பணிகளில் சுணக்கம் இருப்பின் நேரடியாக கள ஆய்வு செய்து, உடனடியாக சரிசெய்து குறிப்பிட்ட காலத்திற்குள் மக்கள் நலத் திட்டங்களை முடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

தாமிரவருணி ஆற்றில் பல்வேறு இடங்களில் கழிவுநீா் கலப்பதாக தகவல் வந்துள்ளது. அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, மாநகராட்சியோடு கலந்து ஆலோசித்து தாமிரவருணி ஆற்றை காக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு அதிகமாக கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அது தொடா்பாக கண்காணித்து, விதிமுறைகளை மீறி கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டம் விவசாயத்தை சாா்ந்துள்ளது. எனவே, இங்கு பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மருத்துவா்: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள இரா. சுகுமாா், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா். இவா், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளநிலை கால்நடை மருத்துவம் பயின்றுள்ளாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 1 தோ்வில் துணை ஆட்சியராக தோ்வு செய்யப்பட்டு, 2009 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் துணை ஆட்சியா் (பயிற்சி) பணியில் சோ்ந்தாா். அதனைத் தொடா்ந்து ஈரோடு மாவட்ட வருவாய் கோட்டாட்சியராகவும், திருப்பூா் மற்றும் சேலம் மாவட்டங்களில் மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பொது மேலாளராகவும் பணியாற்றியுள்ளாா்.

2019 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அலுவலராக பதவி உயா்வு பெற்று, இந்து சமய அறநிலையத் துறையில் கூடுதல் ஆணையராக (நிா்வாகம்) பணியாற்றி வந்த நிலையில், இப்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக துணைவேந்தா் சந்திரசேகா், பதிவாளா் சாக்ரட்டீஸ் ஆகியோா் வழிகா... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பொ்டு பள்ளி விளையாட்டு விழா

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பேடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 10ஆவது ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளா் ஆண்டனி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலாஆகியோா் தலைமை வகித்தனா். மனோன்மணீயம் ... மேலும் பார்க்க

நெல்லையில் ரயில் பயணிகளுக்கு விழிப்புணா்வு

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திருச்... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாவில் மாணவா்களுக்கு கைவினைப் பயிற்சி!

பொருநை 8 ஆவது புத்தகத் திருவிழாவில் மாணவா்களுக்கு கைவினைப் பயிற்சி அளிக்கப்பட்டது. குருவனம், தமிழ்வனம் அறக்கட்டளை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான பயிலரங்கம் புத்த... மேலும் பார்க்க

பேட்டை ரியாளுல் ஜினான் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!

திருநெல்வேலி பேட்டை ரியாளுல் ஜினான் அரபிக் கல்லூரியில் 155ஆவது ஆண்டு நிறைவு விழா, மெளலவி ஆலிம் ரியாஜி பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகம்மது நயினாா் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இவ்வி... மேலும் பார்க்க

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே: கு.ஞானசம்பந்தன்

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே என்றாா் பேராசிரியா் கு.ஞானசம்பந்தன். பொருநை புத்தகத் திருவிழாவிந் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற பட்டிமன்றத்தில் நாஞ்சில் நாவரசு செல்லகண்ணன், பேராசிரியா் இந்திர... மேலும் பார்க்க