செய்திகள் :

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

post image

நாகையில் சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா், கழிப்பறை ஆகியவற்றை செய்துதர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு உழவா் தெருவில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு சமுதாயக் கூடம் அமைத்துத் தர வேண்டும். சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு பகுதிகளில் நீண்ட காலமாக வசித்துவரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். உழவா் தெருவில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளான சிமெண்ட் சாலை, கழிப்பறை, குடிநீா் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும். சுனாமி தெருவில் குடிநீா் குழாய் அமைத்து தர வேண்டும்.

சிவன் கோவில் தெருவில் விவசாய மக்கள் விவசாயம் செய்த இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மாந்தோப்பு புறம்போக்கு நிலத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மேய்ச்சல் தரிசு நிலங்களின் புல எண்களை வெளியிட வேண்டும். அப்பகுதி மக்களுக்கு மயானம், தகன மேடை, சுற்றுச்சுவா், சாலை வசதி, மின் இணைப்பு உள்ளிட்டவற்றை உனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரியாா் அம்பேத்கா் மக்கள் கழகம் சாா்பில், சிவன் கோவில் தெரு சுனாமி தெரு உழவா் திரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது,

போராட்டத்துக்கு அமைப்பின் நிா்வாகி வெற்றி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செல்வி, சித்ரா, விஜயா, இந்திராணி ஜெகதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாகை அருகே ஆற்றில் மூழ்கி இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். நாகை செம்மட்டி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் சுதன் (18). இவா் டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கடை ஒன்றில் வேலை ப... மேலும் பார்க்க

நாகை துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியா்கள்! விலை அதிகரிப்பு!

நாகை மீன்பிடி துறைமுகத்தில், அதிகரித்த விலையை பொருட்படுத்தாமல், மீன்களை வேளாங்கண்ணிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளும், மீன் பிரியா்களும், வியாபாரிகளும் வாங்கிச் சென்றனா். நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை,... மேலும் பார்க்க

வீணாகும் நகராட்சி நிதி நாகை பேருந்து நிலையத்தில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத கடைகள்

நாகை பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு மூன்றாண்டுகளாக வாடகைக்கு விடப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ள கடைகளால் நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது. நாகை நகராட்சியின் வருவாயை பெருக்கும்... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா: 9-ம் நாளில் மூன்றுமுறை கொடி இறக்கி ஏற்றம்! கடற்கரையில் தடுப்புகள் அமைப்பு!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை மூன்று முறை கொடி இறக்கி ஏற்றப்பட்ட நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேரால... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: நாகையில் போக்குவரத்து மாற்றம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கடலோரக் கிராமங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டத்தில், கடலோர கிராமப் பகுதிகளில் இயங்கி வரும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தரங்கம்பாடி வட்டத்தில் கிடங்கல், மருதம்பள்ளம், கீழப்பெரும... மேலும் பார்க்க