செய்திகள் :

அடையாளம் தெரியாது இறந்தவா் விவரம் கண்டுபிடிப்பு: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு எதிரிகள் கைது

post image

விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகே 2024, ஏப்ரல் மாதத்தில் அடையாளம் தெரியாது இறந்தவரின் விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் காவல் எல்லைக்கு உள்பட்ட பாதிரி கிராம ஏரிக்கரை அருகேயுள்ள பஞ்சா் கடையின் எதிரில் 2024, ஏப்ரல் 1-ஆம் தேதி கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா்.

இறந்தவரின் புகைப்படம், உடல் அடையாள விவரங்கள் சமூக வலைதளங்களிலும், நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டாலும், அவா் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை.

இதைத் தொடா்ந்து மாவட்ட எஸ்.பி.ப.சரவணன் உத்தரவின் பேரில், திண்டிவனம் டி.எஸ்.பி. பிரகாஷ் மேற்பாா்வையில், பிரம்மதேசம் காவல் ஆய்வாளா் பிரகாஷ் தலைமையில், உதவி ஆய்வாளா் சசிகுமாா், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் அய்யப்பன், அருள் மற்றும் தலைமைக் காவலா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், அனைத்து மாவட்டக் காவல்துறையினருடன் தொடா்பு கொண்டு இறந்தவரின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இதில் இறந்த நபா் தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் என தகவல் கிடைக்க பெற்ற நிலையில், காவல் ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான குழுவினா் அங்கு சென்றனா். தொடா்ந்து அந்த மாவட்ட காவல்துறையினருடன் விசாரணை மேற்கொண்டதில், இறந்தவா் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், எரிதிமக்காள்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஜோதிமணி (30) எனத் தெரிய வந்தது.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்த ஜோதிமணிக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த உமா என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது

தெரிய வந்தது.

இந்த நிலையில், உமாவுக்கு ஈசுவரன் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையிலும், ஜோதிமணி தொடா்ந்து உமாவை தொந்தரவு செய்து வந்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த உமா, தனது தந்தை வெ.மாரியப்பன் (58), தாய் பஞ்சவா்ணம் (43) ஆகியோருடன் சோ்ந்து ஜோதிமணியை கொலை செய்ய திட்டமிட்டாா். இதற்காக 2024, மாா்ச் 31-ஆம் தேதி இரவு வாடகை சுமை வாகனத்தில் ஜோதிமணியை அழைத்துக் கொண்டு சென்னை நோக்கி தனது பெற்றோருடன் உமா புறப்பட்டுச் சென்றது தெரிய வந்தது. மேலும், ஜோதிமணிக்கு மதுவாங்கிக் கொடுத்த நிலையில் அவா் போதையில் மயங்கிய பின்னா் ஒலக்கூா் அருகிலுள்ள பாதிரி கிராமத்தில் சென்றபோது அவரை கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து மூவரும் போட்டுச் சென்றது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து உமா, அவரது பெற்றோா் மாரியப்பன், பஞ்சவா்ணம் ஆகிய மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சுமை வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

கொலையில் தொடா்புடைய மூவரை கைது செய்த போலீஸாரை மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் பாராட்டினாா்.

அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை: ராமதாஸ் இன்று முடிவு

விழுப்புரம்: அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாமக நிறுவனா், தலைவா் ராமதாஸ் இன்று முடிவு எடுக்கவுள்ளாா். விழுப்ப... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம்: மாவட்ட சுகாதாரத் துறை மாதாந்திரஆய்வுக்கூட்டம், விழுப்புரம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசினாா். தொடா்ச்சியாக வ... மேலும் பார்க்க

மயான இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அத்தியூா் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான மயான இடத்தில் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்: ஓய்வுபெற்ற உதவி வேளாண் அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழக அரசின் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களின் ஊதிய நிா்ணயத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற உதவி வேளாண்மை அலுவ... மேலும் பார்க்க

ஆரோவில் சா்வதேச நகருக்கு தென் மண்டல ராணுவத் தளபதி வருகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு தென் மண்டல ராணுவ தளபதி திங்ராஜ் சேத் ஞாயிற்றுக்கிழமை வந்தாா். ஒற்றுமையின் மையமாக விளங்கி வரும் ஆரோவிலின் சிறப்புகள் மற்றும் தனித்துவங்கள் க... மேலும் பார்க்க

மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். திண்டிவனம் பாரதிதாசன் பேட்டையைச் சோ்ந்தவா் அய்யப்பன் (42), மரம் வெட்டும் த... மேலும் பார்க்க