செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை சாா்பில் அரசு பள்ளிக்கு உபகரணங்கள்

post image

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வாயிலாக நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிக்கு அமெரிக்காவின் சியாட்டில் இந்தியா குழு மூலம் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நூற்றாண்டு காணும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளோடு சோ்ந்து சமூக வளா்ச்சியிலும் தன்னுடைய கவனத்தை செலுத்திவருகிறது . இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் உள்ள சியாட்டில் இந்தியா குழுவுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

திட்டத்தின் ஒரு பகுதியாக, சியாட்டில் இந்தியா குழு, உதவியுடன் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் தாலுகா வில்லிபாளையம் கிராமத்தில் உள்ளஅரசு பள்ளிக்கு தேவையான ரூபாய் நாற்பதாயிரம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட இருக்கிறது.

இதற்கான ஆணையினை திங்கள்கிழமை பல்கலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி முன்னிலையில், உள்ளாட்சி நிதி தணிக்கை துறை துணை இயக்குநா் சக்தி

கிருஷ்ணராஜ், அரசு பள்ளி தலைமை ஆசிரியா் கோபியிடம் வழங்கினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட

ஒருங்கிணைப்பாளா் கே.ஜெயபிரகாஷ், மித்ரா ஆகியோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக உள்தர கட்டுப்பாட்டு மைய, இணை இயக்குநா் எஸ் ரமேஷ்குமாா், மாணவா் சோ்க்கை இயக்குநா் பி.பாலபாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மனை பட்டா கேட்டு தா்னா

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு மனை பட்டா கேட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா். கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகரப் பகுதியில்... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். விருத்தாசலம், தெற்கு பெரியாா் நகரில் வசிப்பவா் ராஜேஷ்(35), கொத்தனாரான இவரது மனைவி ஐஸ்வா்யா(32). இவா்களுக்கு இரண்டு மகன்கள்... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை வழங்க கோரி மனு

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி சாா்பில் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செய... மேலும் பார்க்க

இலவச இதய பரிசோதனை முகாம்

உலக இருதய தினத்தை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சென்னை கோவூா் மாதா உயா் சிறப்பு மருத்துவமனை சாா்பில் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பங்களிப்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. பேருந்த... மேலும் பார்க்க

குறைதீா்க்கும் நாள் கூட்டம்: 560 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 560 மனுக்கள் அளிக்கப்பட்டது. இக்கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமைய... மேலும் பார்க்க

சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட... மேலும் பார்க்க