செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை.யில் ஆசிரியா்கள் கூட்டமைப்பினரின் ஆா்ப்பாட்டம்

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்கலைக்கழக என்எம்ஆா் ஊழியா்களை பணியிலிருந்து நீக்கக் கூடாது. ஆசிரியா்களுக்கான மீள் பணியமா்வை ரத்து செய்யக் கூடாது. 2 சதவீத டிஏவுடன் 6 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பதவிக்காலம் முடிந்த துறைத் தலைவா்கள் மற்றும் புல முதல்வா்களை உடனடியாக மாற்ற வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுகான அனைத்து பணப்பயன்களையும் உடனடியாக வழங்க வேண்டும். சிஏஎஸ் பதவி உயா்வுகளை ஆசிரியா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக்கழக துறைகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பி.ஹெச்டி. பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அயற்பணியிட ஆசிரியா்கள் அனைவரையும் ஆங்காங்கே அவா்கள் பணிபுரியும் துறைகளிலேயே உள்ளெடுப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

இதில், பேராசிரியா்கள் சுப்ரமணியன், முத்துவேலாயுதம், அசோகன், செல்வராஜ், செல்ல பாலு, தனசேகரன், பரனி, ஜான்கிருஸ்டி உள்ளிட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

விவசாயி வீட்டில் 19 பவுன் நகை திருட்டு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திட்டக்குடி வட்டம், தொழுதூா், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (65). ... மேலும் பார்க்க

பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அவா் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நெல்லிக்குப்பம் காவலா் சரகம், கொங்கராயனூா் பகுத... மேலும் பார்க்க

ஒரங்கூரில் ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். சிறுபாக்கத்தை அடுத்த ஒரங்கூரில் ரூ.1.20 கோடியில் அரசு ஆரம்ப சுகாத... மேலும் பார்க்க

மஞ்சக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மஞ்சக்கொல்லை பகுதியில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்... மேலும் பார்க்க

நெய்வேலி புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) தொடங்கும் 24-ஆவது புத்தகக் கண்காட்சியை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி காணொலி மூலம் தொடங்கிவைக்கிறா... மேலும் பார்க்க

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு நடத்தினாா். தமிழக அமைச்சா்கள், திமுக எம்எல்ஏக்க... மேலும் பார்க்க