செய்திகள் :

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

post image

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதியிலுள்ள நகர சிவில் நீதிமன்றத்துக்கு மர்ம நபர் அனுப்பிய மின்னஞ்சலில், அந்த நீதிமன்றம், ஆளுநர் மாளிகை, ஜிம்கானா கிளப் மற்றும் செகந்திராபாத் சிவில் நீதிமன்றம் ஆகிய 4 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

ஹைதரபாத்தின் முக்கிய 4 இடங்களிலும், ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு நிறுவப்பட்டிருப்பதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து, காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றங்களில் இருந்த நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, அப்பகுதிகள் அனைத்தும் பரபரப்பாகக் காட்சியளிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மற்றும் காவல் துறையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் அங்கு தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சோதனைகளில், தற்போது வரை சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (ஜூலை 8) அதிகாலை மர்ம நபர்கள் அனுப்பிய மிரட்டல் மின்னஞ்சலானது அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களின் பெயரில் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர்களைக் கண்டுபிடிக்க அம்மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Police are conducting intensive searches in Hyderabad after bomb threats were made to four locations, including the Raj bhavan.

இதையும் படிக்க: பாமாயில் என்ன விஷமா? உண்மைக்கு மாறான பொய் விளம்பரங்கள்!

ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபாா்’ திட்டம்: தேசிய பழங்குடியினா் ஆணையம் தகவலளிக்க மறுப்பு

கிரேட் நிகோபாா் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் மறுத்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப்பாதை பாதுகாப்பு: அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

ரயில்வே கடவுப்பாதை வாயில்களில் (ரயில்வே கேட்) பாதுகாப்பு குறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதுதொடா்பாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ரயில்வே கடவுப்பா... மேலும் பார்க்க

தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகை தாக்கல்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகையை தில்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை த... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க