செய்திகள் :

அதிநவீன கண் மருத்துவமனை அமைக்க ரூ.110 கோடி முதலீடு செய்யும் சங்கரா அறக்கட்டளை!

post image

புதுதில்லி: பாட்னாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை அமைக்க சங்கரா கண் அறக்கட்டளை ரூ.110 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

பாட்னாவின் உள்ள கன்கர்பக்கில் 1.60 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள இந்த மருத்துவமனையானது, லாப - நோக்கற்ற கண் பராமரிப்பு சேவை வழங்கும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவமனை ஆண்டுதோறும் 30,000 இலவச கண் அறுவை சிகிச்சை செய்யும் திறனைக் கொண்டிருக்கும். இது பிகார், உத்தர பிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களின் உள்ள நோயாளிகளுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தும் என்று சங்கரா கண் அறக்கட்டளை இந்தியா தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனையானது 2026ஆம் ஆண்டு, ஜூலை முதல் செயல்படும்.

மருத்துவமனையானது சுமார் ரூ.110 கோடி முதலீட்டில் கட்டப்படும். பாட்னாவில் சங்கரா கண் மருத்துவமனை தொடங்கப்பட்டதன் மூலம், அணுகல் குறைவாக உள்ள பகுதிகளுக்கு, உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சையை நாங்கள் கொண்டு வருகிறோம்.

இந்த மருத்துவமனை பாட்னாவில் அமைந்துள்ளதால், அருகிலுள்ள மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் எங்களின் சேவை விரிவடையும் என்றார் சங்கரா கண் அறக்கட்டளை இந்தியா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரான ஆர்.வி. ரமணி.

பாட்னா மருத்துவமனையானது சங்கரா கண் அறக்கட்டளையின் 15 வது மருத்துவமனையாக இருக்கும் நிலையில், தற்போது 10 மாநிலங்களில் 14 மருத்துவமனைகள், சங்கரா கண் அறக்கட்டளை வலையமைப்பைக் கொண்டுள்ளது.

இதையும் படிக்க: வெங்காயத்தின் மீதான 20% ஏற்றுமதி வரி நீக்கம்: சிவராஜ் சிங் சௌகான்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49 ஆக முடிவடைந்தது.நடப்பு நிதியாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு 2 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. ஏப்ரல் ... மேலும் பார்க்க

வரி விதிப்பு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!

மும்பை: 2024-25 நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது. டிரம்ப் கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற உணர்வு அதிகரித்துள்ளதால், உலகளாவிய... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐபோன் 16-க்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மொபைல்கள்!

ஆப்பிள் ஐபோன் 16 புரோ மேக்ஸ் அதிநவீன தொழில் நுட்பவசதிகளுடன் சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தாலும் அதற்குப் போட்டியாக குறிப்பிடத்தக்க 5 ஆண்ட்ராய்டு மொபல்களும் களமிறக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் ஐபோன் 16 புரோ... மேலும் பார்க்க

அதிரடியாக உச்சம் தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் மக்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 இன்று உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ... மேலும் பார்க்க

விலை உயரும் பிஎம்டபிள்யு காா்கள்

சொகுசுக் காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யு குரூப் இந்தியா, தனது வாகனங்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

பங்குச் சந்தை இன்று(மார்ச் 27) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,087.39 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.50 மணியளவில், சென்செக்ஸ் 419.26 ... மேலும் பார்க்க