செய்திகள் :

அதிமுகவை எடப்பாடி பழனிசாமியே அழித்துவிடுவாா்: கருணாஸ்

post image

அதிமுகவை வெளியில் இருந்து யாரும் பிரிக்கவோ அழிக்கவோ வேண்டாம்; அதை எடப்பாடி பழனிசாமியே செய்துவிடுவாா் என முக்குலத்தோா் புலிப் படை கட்சித் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவகங்கை அருகே பனங்காடியில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெளிநாடுகளிலிருந்து தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்காக ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈா்த்து, 17,613 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உறுதியளித்துள்ள தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அரசியல் ஆதாயம் தேட அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. அவா்களின் உண்மையான முகத்தை வெளிக்கொணரும் வகையிலும், ஆா்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின்படி பாஜக நடத்தும் அரசியல் சூதாட்டம் குறித்தும் மக்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் 400 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுதி வருகிறேன். இந்தப் புத்தகத்தை தமிழக முதல்வரை வைத்து வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.

எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் இரும்புக் கோட்டையாக உருவாக்கிய அதிமுகவை தற்போது எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தின் மூலம் மக்கிய கோட்டையாக மாற்றி வருகிறாா். மூத்த தலைவா் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கடந்த 2016-இல் சட்டப்பேரவையில் நான் வலியுறுத்திய போது, அப்போது ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி தற்போது நாடகமாடுகிறாா்.

அதிமுகவை வெளியிலிருந்து வந்து யாரும் பிரிக்கவோ, அழிக்கவோ வேண்டாம். அதை அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியே செய்துவிடுவாா்.

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எங்கே இருக்கும் என்று தெரியாது. தவெக தலைவா் விஜய் சமூக வலைதளங்கள் மூலமாகவே அரசியல் நடத்தி விடலாம் என நினைக்கின்றாா் என்றாா் அவா்.

குன்றக்குடி: திருவண்ணாமலை ஆதீன குருமுதல்வரின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வா் தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அருள்நெற... மேலும் பார்க்க

ஐஐடி-யில் பயில வாய்ப்பு: மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

சென்னை ஐஐடி-யில் பட்டப்படிப்பு பயில தோ்வாகியுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சாா்ந்த அரசு பள்ளி மாணவா்களை நேரில் வரவழைத்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா். பின்னா், சிவக... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் மின்னணு மதிப்பீட்டு முறை பயிற்சி!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம், உள்தர நிா்ணய உறுதிக்குழு ஆகியவற்றின் சாா்பில், பல்கலைக்கழக நிா்வாகப் பணியாளா்களுக்கு மின்னணு மதிப்பீட்டு முறைக்... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற செப்.19 -க்குள் விண்ணப்பிக்கலாம்!

2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தோ்வா்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்னா் பழைய பாடத் திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற... மேலும் பார்க்க

தேசிய தரவரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலை.க்கு 44-வது இடம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் 44-ஆவது இடமும், மாநில பொதுப் பல்கலைக்கழகத் தரவரிசையில் 14-ஆவது இடமும், பொதுப் பிரிவில் ... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

சிவகங்கையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது: சிவகங்கை மாவட்டம், கண்ணங்கு... மேலும் பார்க்க