செய்திகள் :

அதிமுக செயaற்குழு கூட்டம்! 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

post image

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மாளிகையில், கழக அவைத்தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 375 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், பொன்னையன், எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, கே.பி. முனுசாமி , முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாதவரம் மூர்த்தி வருகை ஆகியோரும் பங்கேற்றனர்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, அதிமுகவின் முதல் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

செயற்குழு கூட்டத்தில் அதிமுக நிறைவேற்றிய 16 தீர்மானங்கள்

  • பொது எதிரியான திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துகளுடையவர்களுடன் சேர்ந்து மெகா கூட்டணி

  • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்

  • நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசு, மக்கள் மற்றும் மாணவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

  • மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை, கச்சத்தீவு மீட்பு, தொகுதி மறுவரையறை, மாநில சுயாட்சி என தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கண்டனம்

  • கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு, தற்போது அதனை மீட்பதற்காக, அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் திமுகவுக்கு கண்டனம்

  • நீர் மேலாண்மையை முறையாகப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் மற்றும் நடந்தாய் வாழி காவேரி திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்த பிரதமருக்கு நன்றி.

  • மதச்சார்பற்ற அதிமுக, என்றென்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் என்று உறுதி

  • கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

  • சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள், கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வையும் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம்

  • பெண்களை தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடியை பதவிநீக்கம் செய்ய தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு

  • சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, போதைப் பொருள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றை எதிர்த்து திமுக அரசுக்கு கண்டனம்

  • மக்கள் நலன்களைப் பாராமல், சுய விளம்பரம் செய்துவரும் திமுக அரசுக்கு கண்டனம்

  • பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் மற்றும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு அதிமுக துணை நிற்கும்.

  • பொது எதிரியான திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு முழு ஆதரவு

  • 2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக மாற்றுவோம்.

  • சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு வரவேற்பு

இதையும் படிக்க:டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?

நாளை அக்னி நட்சத்திரம்: என்ன செய்யக் கூடாது? அரசு வழிகாட்டு நெறிமுறை

சென்னை: தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை க... மேலும் பார்க்க

சின்னசேலத்தில் தனியார் ஊதுவத்தி கம்பெனியில் திடீரென தீவிபத்து

சின்னசேலம் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் கம்பெனியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கூகையூர் சாலையில் பூண்டி எல்லையில் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் ... மேலும் பார்க்க

பத்திரிகை சுதந்திரம்: தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? முதல்வர் கேள்வி

உலக பத்திரிகை சுதந்திரம் தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவ... மேலும் பார்க்க

தேமுதிகவிலிருந்து ஒருபோதும் விலகமாட்டேன்: நல்லதம்பி

சென்னை: நான் தேமுதிகவிலிருந்து விலகுவதாக ஒருபோதும் கூறவில்லை என்று தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி விளக்கம் கொடுத்துள்ளார்.கட்சியிலிருந்து விலகுவதாக பொய்யான தகவலை பரப்பியுள... மேலும் பார்க்க

கத்திரி வெய்யில் குறித்து நல்ல செய்தி சொன்ன பிரதீப் ஜான்

சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில நல்ல தகவல்களை வழங்கியுள்ள... மேலும் பார்க்க

மே 5, 6ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகத்தில் ஒருபக்கம் வெய்யில் கொளுத்திவரும் நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு ... மேலும் பார்க்க