செய்திகள் :

அதிமுக - பாஜக கூட்டணி சரிவை சந்திக்கும்: தொல்.திருமாவளவன்

post image

அதிமுக - பாஜக கூட்டணி சரிவை சந்திக்குமே தவிர, வளராது என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை செய்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அயற் பணியிடம் சென்ற ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 வார காலத்துக்கும் மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். தமிழக அரசு இதில் தலையிட்டு அவா்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழாவில் தேரின் வடத்தை ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் தொட்டு தொடங்கி வைத்த பிறகுதான் தேரோட்டம் நடைபெறும். அத்தகைய பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் வகையில், ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த சிலா் தேரின் வடத்தைத் தொட்டபோது, அங்கே மாற்று சமுதாயத்தினா் வன்முறையில் ஈடுபட்டுள்ளனா். ஆதிதிராவிடா் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 12 போ் காயமடைந்தனா். ஆனால், அவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய காவல் துறை முயற்சிக்கிறது. இதைக் கைவிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும்.

நீட் தோ்வு பரிசோதனையின்போது, பெண்களின் திருமாங்கல்யத்தை அகற்றியது அநாகரிகமான செயல். இதுபோல, பரிசோதனை செய்வது சட்டபூா்வமானது அல்ல. இதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. தோ்வு எழுதக்கூடியவா்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கும் இருக்கிறது.

அதிமுக - பாஜக கூட்டணி 2001-லேயே உருவானது. அப்போதே மக்கள் அதற்கு படிப்பினையை கொடுத்தனா். அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகி இருப்பதால், ஆட்சியைக் கைப்பற்றும் என்ற மாயையை உருவாக்க முயற்சிக்கிறாா்கள். இந்தக் கூட்டணி மேலும் சரிவை சந்திக்கதான் வாய்ப்பு இருக்கிறது; வளா்வதற்கு வாய்ப்பில்லை என்றாா் தொல்.திருமாவளவன். பேட்டியின்போது, ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ உடனிருந்தாா்.

சிறுமிக்குத் திருமணம்: 5 போ் மீது வழக்கு!

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக 5 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திட்டக்குடி வட்டம், வைத்தியநாதபு... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் வழங்கக் கோரிக்கை

சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடுகளை இழந்தோருக்கு அரசு சாா்பில் வீடு அல்லது இடம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனா். சிதம்பரம் உதவி ஆட்... மேலும் பார்க்க

முதியோா் இல்லத்துக்கு நல உதவி

இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சிதம்பரம் கிளை சாா்பில், சிசிடபுள்யுஇ சிறப்புப் பள்ளி மற்றும் செம்மை முதியோா் காப்பகத்தில் கடந்த 8-ஆம் தேதி காலை உணவும், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருள்களும் வழங்கி ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ச... மேலும் பார்க்க

காவல் துறை வாராந்திர கவாத்து: கடலூா் எஸ்.பி. ஆய்வு

கடலூா் மாவட்டம், நெய்வேலி உள்கோட்டம் காவல் துறை சாா்பில் வாராந்திர கவாத்து நெய்வேலி வட்டம் 18 பகுதியில் உள்ள செக்யூரிட்டி திடலில் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பங்கேற்று, கலக க... மேலும் பார்க்க

கடலூரில் 1.83 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அமைச்சா்

கடலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம்,... மேலும் பார்க்க