செய்திகள் :

``அதிமுக - பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல்; அதனால்தான்'' - செல்வப்பெருந்தகை சொல்வதென்ன?

post image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்திருந்தார்.

அதேபோல், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செங்கோட்டையன், “கட்சியில் இருந்து வெளியேறிவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால்தான் அதிமுக வெற்றி பெற முடியும்.

எடப்பாடி, செங்கோட்டையன்
எடப்பாடி, செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைந்தால்தான் நான் முழுமையாக இறங்கி வெற்றிக்காகப் பணியாற்றுவேன். இது நடந்தால்தான் சுற்றுப்பயணம், தேர்தல் பணிகளில் இறங்கி பணியாற்றுவேன்,” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

 செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

அதற்கு பதிலளித்து அவர், “அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் கெடு கொடுத்துவிட்டனர். அது மூழ்கும் கப்பல்.

அந்தக் கப்பலில் ஏறினால் மூழ்கி விடுவோம் என்று ஒவ்வொரு காரணத்தையும் சொல்லி வெளியேறி வருகிறார்கள். அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்,” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையும், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்... மேலும் பார்க்க

``எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது; அது தற்கொலைக்கு சமம்'' – தொடர்ந்து விமர்சிக்கும் டிடிவி தினகரன்

"ஓபிஎஸ்-சும் நானும் கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுதான்" என்று மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டம... மேலும் பார்க்க

``ஆமை புகுந்த வீடும், பா.ஜ.க நுழைந்த மாநிலமும் உருப்படாது'' - ப.சிதம்பரம் காட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் காங்கிரஸ் கட்சி புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:"... மேலும் பார்க்க

Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா?

Doctor Vikatan:மூட்டுவலி (Arthritis) உள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா, எந்த வகையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். வாக்கிங் செய்யலாமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர்... மேலும் பார்க்க

பதவி பறிப்பு மசோதா: ``INDIA கூட்டணியில் அதிக குற்றப்பின்னணி இருக்கும் கட்சி திமுக'' - ADR அறிக்கை

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு, நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பதவி நீக்க மசோதாவை அறிமுகப்படுத்தியது.அதில், “ஓர் அமைச்சர் பதவியில் இருக்கும்போது, ஐந்து ... மேலும் பார்க்க

ஆரோக்கியம் தருவது சைவமா; அசைவமா? - மருத்துவர் சொல்வதென்ன?

சாப்பாடு என்றாலே நம் எல்லோருடைய மனதிற்குள்ளும் அப்படியொரு சந்தோஷம் வரும். அது பசிக்கும்போது வீட்டில் அம்மா தன் கையால் பரிமாறும் சாம்பார் சாதமாக இருந்தாலும் சரி, நண்பர்களுடன் சுடச்சுட பிரியாணி சாப்பிடு... மேலும் பார்க்க