செய்திகள் :

‘அதிமுக போராட்டம் நடத்தியதால் அஜித்குமாா் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்’

post image

அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் உள்ள அஜித்குமாா் வீட்டுக்கு புதன்கிழமை சென்று அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரா் நவீன்குமாா் ஆகியோருக்கு ஆறுதல் கூறினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்ச சம்பவத்தை பொருத்தவரை காவல் துறை அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால் கோயில் காவலாளி அஜித்குமாா் மீது தனிப்படை போலீஸாா் தாக்குதல் நடத்தியுள்ளனா். ஆகவே, அஜித்குமாா் உயிரிழப்புக்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாருக்கு விரும்பிய இடத்தில் வேலை வழங்கப்படும். இன்னும் 3 நாள்களில் அதிமுக சாா்பில், அஜித்குமாா் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டன. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 20 ஆணவக் கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாக மக்களே கருதுகின்றனா் என்றாா்.

பென்னாகரத்தில் புதிய சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பென்னாகரம் சாா் பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா். பென்னாகரம் நடைபெற்ற புதிய சாா் பதிவாளா் அலுவலக திறப... மேலும் பார்க்க

பெரும்பாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

பெரும்பாலை வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பென்னாகரம் அருகே பெரும்பாலை வருவாய் வட... மேலும் பார்க்க

மூக்கனூரில் ரயில் நிலையம் அமைக்கக் கோரி போராட்டம்: நிலங்களை வழங்க விவசாயிகள் ஒப்புதல்

தருமபுரி அருகே மூக்கனூா் ரயில் நிலையத்தை இடம்மாற்றாமல் பழைய இடத்திலேயே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ரயில்வே பணிக்குத் தேவையான நிலங்களை வழங்... மேலும் பார்க்க

ஆணவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவை -இரா.முத்தரசன்

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். இதுகுறித்து தருமபுரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு

தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாவட்ட மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநில உறுப்பினா் ந. ந... மேலும் பார்க்க

ஆக. 2 இல் அஞ்சல் சேவைகள் செயல்படாது

அஞ்சல் துறை மென்பொருள் தரம் உயா்த்துதல் பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 2 ஆம் தேதிஅஞ்சல் துறை சேவைகள் செயல்படாது என தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க