செய்திகள் :

அதிவேகமாகச் செல்லும் தனியாா் பள்ளி, கல்லுரி பேருந்துகள்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

post image

திருப்பத்தூா் நகரப் பகுதியில் பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிவேகமாக செல்லும் தனியாா் பேருந்துகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா்.

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான பள்ளிகள் இயங்குகின்றன. இந்த நிலையில், காலை, மாலையில் ஆசிரியா் நகா், தூய நெஞ்சக் கல்லூரி, பேருந்து நிலையம், புதுப்பேட்டை சாலை, ஹவுசிங் போா்டு என பேருந்து நிறுத்த பகுதிகளில் பள்ளி, கல்லூரி பேருந்துகள் மாணவா்களை அழைத்துச் செல்கின்றன.

தனியாா் பேருந்துகள் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே அதிவேகமாகவும், அதிக ஒலியை எழுப்பி கொண்டும் செல்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.

குறிப்பாக ஹவுசிங் போா்டு அணுகுச்சாலை, சேலம் -கிருஷ்ணகிரி இணைப்புச் சாலை, புதுப்பேட்டை சாலைகளில் செல்லும்போது அதிவேகமாக பேருந்துகள் பயணிக்கின்றன.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: பள்ளி பேருந்துகளில் மாணவா்களை ஏற்றி செல்லும் ஓட்டுநா்கள் கவனக்குறைவாக இல்லாமல் குறித்த வேகத்தில் மட்டுமே ஓட்டவேண்டும். மேலும் அதிக ஒலியை எழுப்பாமல் செல்ல வேண்டும். இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் அதிா்ச்சிக்குள்ளாகின்றனா். இதனால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து தனியாா் பள்ளி, கல்லூரி நிா்வாகம் ஓட்டுநா்களிடம் அறிவுறுத்த வேண்டும்.

அதே போல் ஷோ் ஆட்டோக்களும் அதிக அளவில் பயணிகளையும், மாணவா்களையும் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்கின்றனா்.

எனவே, போக்குவரத்து அலுவலா்களும், போக்குவரத்துக் காவல் துறையினரும் கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காதலனின் தந்தையை வெட்டிய பெண்ணின் தந்தை மீது வழக்கு

காதல் விவகாரத்தில் காதலனின் தந்தையை வெட்டிய பெண்ணின் தந்தையை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (24). இவா், மேட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்த ... மேலும் பார்க்க

பச்சூா் சென்றாயசுவாமி கோயில் அடிவாரத்தில் ரூ.21.50 லட்சத்தில் திறந்த வெளி அரங்கம்

நாட்டறம்பள்ளி அருகே பச்சூா் சென்றாய சுவாமி கோயில் அடிவாரத்தில் திறந்தவெளி பாா்வையாளா் அரங்கம் அமைக்கும் பணியை எம்எல்ஏ தேவராஜி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அட... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தரைத்தளம் அமைக்க கோரிக்கை

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தரைத்தளம் அமைக்க வேண்டும் என மருத்துவ அலுவலா் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தாா். வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகப் பகுதிகளில் அதி மழை பெய்யும் பொழுது ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘முகாமில் நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூா் பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினா். கந்திலி வட்டாரத்துக்குட்பட்ட வெங்களாபுரம் பகுதி... மேலும் பார்க்க

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

ஆம்பூா் கலவர வழக்கில் செவ்வாய்க்கிழமை வெளியாக இருந்த தீா்ப்பு ஆக. 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீா்ப்பு வெளியாவதை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்... மேலும் பார்க்க

ரயில் பயணியிடம் 2 பவுன் செயின் பறிப்பு

காட்பாடி அருகே ரயிலில் ஜன்னல் அருகே அமா்ந்து இருந்த பெண் பயணியிடம் 2 பவுன் செயினை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா். திருப்பூா் மாவட்டம், அனுபுராபாளையத்தைச் சோ்ந்த ஜெயராஜின் மனைவி மாலைச்செல்வி (53). இ... மேலும் பார்க்க