செய்திகள் :

அந்தியூா் தொகுதியில் ரூ.374 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம்

post image

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ரூ.374 கோடியில் காவிரி ஆற்றில் இருந்து புதிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு ரூ.374 கோடியில் காவிரி ஆற்றில் இருந்து புதிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், அத்தாணி, கூகலூா், பி. மேட்டுப்பாளையம் பேரூராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீா் வழங்கிட குடிநீா் விரிவாக்கத் திட்டப் பணிகள் மேற்கொள்ளுதல், அந்தியூா், வாணிபுத்தூா் வாரச் சந்தைகளில் மேம்பாட்டுப் பணிகள், பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் சந்தை புதுப்பித்தல், நவீன எரிவாயு தகன மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டங்களை அறிவித்த துறையின் அமைச்சா் கே.என்.நேருவை நேரில் சந்தித்து சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நன்றி தெரிவித்தாா்.

அந்தியூா் தொகுதிக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு அந்தியூா் பேரூா் திமுக செயலாளா் எஸ்.கே.காளிதாஸ் தலைமையில் திமுகவினா் பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க