செய்திகள் :

அனுப்பட்டியில் குப்பை கொட்டிய லாரி, பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள்

post image

பல்லடம் அருகே அனுப்பட்டி ஜெ.ஜெ.நகா் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் குப்பைகளை கொட்டிய லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்லடம் அருகே அனுப்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ. நகா் அருகே முத்துசாமி, விஸ்வநாதன் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் பள்ளமாக இருந்த இடத்தில் கட்டடக் கழிவுகளை கொட்ட நிலத்தின் உரிமையாளா்கள் அனுமதி வழங்கி இருந்தனா்.

இந்நிலையில் கோவை மாவட்டம், நீலம்பூா் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை லாரியில் எடுத்து வந்து கடந்த பல மாதங்களாக அந்த நிலத்தில் கொட்டி வந்துள்ளனா். இந்நிலையில் குப்பையில் துா்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் நிலத்தின் உரிமையாளா்களிடம் தகவல் தெரிவித்தனா்.

மேலும், சம்பவ இடத்துக்கு வந்து குப்பைகளுடன் வந்த லாரி மற்றும் குப்பையை சமன்படுத்த பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை சிறைபிடித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த பல்லடம் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி கொட்டப்பட்ட குப்பைகளை திரும்ப எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

ஊரக வளா்ச்சித் துறை சாா்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இந்த ஆய... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: சிவன்மலை முருகன் கோயிலில் செப்.7 மாலை நடைஅடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 7) மாலை 6.15 மணிக்கு நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவன்மலை முருகன் கோயி... மேலும் பார்க்க

திருப்பூா்- உடுமலை சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக உடுமலை செல்லும் சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கை: திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு

மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட வரி சீா்திருத்த நடவடிக்கைக்கு திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இது குறித்து திருப்பூா் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

வெள்ளக்கோவில் மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயில் மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு ச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பூா் வேலம்பாளையத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நடைமுறையில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம் மற்றும் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பூ... மேலும் பார்க்க