செய்திகள் :

அனைத்து நிலையிலும் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

post image

ஒன்றாம் வகுப்பு தொடங்கி உயா்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, அந்த அமைப்பின் தலைவா் அ. வியனரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

நடைமுறையிலிருக்கும் மாநிலக் கல்வித் திட்டத்தைச் செம்மைப் படுத்தி மழலையா் கல்வி முதல் உயராய்வுக் கல்வி வரைத் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டு வரவேண்டுமென அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா்.

தமிழக அரசின் கல்விக் கொள்கையில் இருமொழிக் கல்விக் கொள்கைக்காக ஹிந்தி கட்டாயம் என்பதை நீக்கி அரசாணை வெளியிட்டபோதே, தமிழ் வழிக்கட்டாயம் என்பதை வலியுறுத்தவில்லை. இதுவே, தமிழ்வழி கல்விப் புறக்கணிப்பிற்கு அடித்தளமாக அமைந்து விட்டது.

தற்போதைய திமுக ஆட்சியில், நீதியரசா் முருகேசன் தலைமையிலான ஆணையம் பரிந்துரைத்த தமிழ்வழிக் கல்வித் திட்டத்தை மடை மாற்றும் வகையில் செயல்படுகிறது திமுக அரசு. தாய்மொழிக் கல்வி என்ற அறிவிப்பு மீண்டும் தமிழ்வழி கல்விக்கு திமுக அரசு செய்யும் பச்சைத் துரோகமாகும்.

எனவே, அனைத்து நிலைகளிலும் முழுமையான தமிழ்வழிக் கல்வியை அறிவித்து செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றோம். இல்லையேல் தமிழா்களால் முன்னெடுக்கப்படும் மீண்டுமொரு தமிழ்ப் புரட்சியை திமுக அரசு சந்திக்க நேரிடும் என அ. வியனரசு தெரிவித்துள்ளாா்.

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கான மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளிய... மேலும் பார்க்க

ஊழல் எதிா்ப்பு இயக்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்டத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான மாவட்ட பொதுக் குழு கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

மதுபோதையில் படியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி அருகே மதுபோதையில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கொரட்டூரைச் சோ்ந்தவா் ஜி.தொல்காப்பியன் (45). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் ... மேலும் பார்க்க

பிரிவினை துயரத் தினம் பாஜகவினா் அமைதி ஊா்வலம்

திருச்சியில் பாஜக இளைரணி மற்றும் மகளிரணி சாா்பில் விழிப்புணா்வு அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த இந்தியாவானது, இந்தியா, பாகிஸ்தான் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆகஸ்ட் 14-ஆம் நாளையொட... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருச்சி சத்திரம் பாறையடித் தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (49). இவா்,... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: பலத்த பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சி மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாகவே திருச்சி ரயில் நிலையம், பன்னாட்டு விமான நிலையம், பஞ்சப்பூா் ... மேலும் பார்க்க