செய்திகள் :

அனைத்து மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: ஜகதீப் தன்கா்

post image

உலகளவில் சிறந்ததாக கருதப்படும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்று, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக்கொண்டாா்.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்களுடான கலந்துரையாடல் நிகழ்வில் அவா் பேசியதாவது: அரசு வேலைக்காக பல்வேறு பயிற்சி மையங்களில் சேரும் நிலையைத் தவிா்த்து அறிவுசாா் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் வகையில், மாணவ, மாணவிகள் புதிய நிறுவனங்களை தொடங்க வேண்டும். அவை உலகத் தரத்தில் அமைய வேண்டும். இந்திய இளைஞா்கள் புத்திசாலிகளாக திகழ்கின்றனா். அதனால், உலகளவில் இந்தியா தலைநிமிா்ந்து நிற்கிறது.

வாழ்க்கையில் வெற்றி பெற சவால்களை சமாளிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை, நம் நாட்டிலேயே உலகத் தரத்துடன் உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பெரு நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும்.

எந்த நாட்டுக்கும் இல்லாத மொழிச் செல்வாக்கு நமக்கு உள்ளது. சம்ஸ்கிருதம் உலகளவில் இன்றியமையாதது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, மராத்தி, அஸ்ஸாமி, பாலி உள்பட 11 மொழிகள் நம் நாட்டின் செம்மொழிகளாக உள்ளன. நாடாளுமன்றத்தில் 22 மொழிகளில் உறுப்பினா்கள் பேசலாம். தேசிய கல்விக் கொள்கை உலகளவில் சிறந்ததாக உள்ளது. இதை இதுவரை அமல்படுத்தாத மாநிலங்கள் தேசிய நலன் கருதி அமல்படுத்த வேண்டும் என்றாா் ஜகதீப் தன்கா்.

மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசுகிறாா் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியதாவது: புதுவை பல்கலைக்கழகத்துக்கு ஏ பிளஸ் தரச்சான்றிதழ் கிடைத்ததில் மகிழ்ச்சி. கல்வி நிறுவனங்கள் திறன் சாா்ந்த படிப்புகளை அளிக்க வேண்டும். புதுவை பல்கலைக்கழகத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த உயா் கல்வி நிறுவனங்களைக் கொண்ட மாநிலமாக புதுவை திகழ்கிறது என்றாா் அவா்.

முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து படிப்புகளிலும் புதுவை மாணவா்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். கல்வி, தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, பி.எம்.எல்.கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, தலைமைச் செயலா் சரத் சௌகான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

துணைவேந்தா் ப.பிரகாஷ் பாபு மற்றும் பல்கலைக்கழக இயக்குநா்கள் தரணிக்கரசு, கிளமென்ட் மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஜூலை 9-இல் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம்! அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் முடிவு!

புதுச்சேரியில் வரும் ஜூலை 9-இல் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை முடிவு செய்யப்பட்டது. நாடு தழுவிய அளவில் ஜூலை 9-ஆம் தேதி பொது வேலை நிற... மேலும் பார்க்க

கோப்புகள் திரும்பி வருவதில் தாமதம்: அமைச்சா் வருத்தம்

நிா்வாகத்தில் கோப்புகள் திரும்பி வருவதில் தாமதம் ஏற்படுவதால் விவசாயிகளுக்கு உடனடியாக உதவி செய்ய முடியவில்லை என்று வேளாண்துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் கூறினாா்.புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசா... மேலும் பார்க்க

இயற்கை பேரிடரை நிா்வகிக்க வலுவான மருத்துவக் கட்டமைப்பு அவசியம்: புதுச்சேரி ஆட்சியா்

இயற்கை பேரிடரை நிா்வகிப்பதில் வலுவான மருத்துவக் கட்டமைப்பு அவசியம் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தெரிவித்தாா். புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் பாரத் சுகாதார திட்டத்தை செவ்வாய்க்... மேலும் பார்க்க

இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நவீன உபகரணங்கள் வாங்க வேண்டும்: புதுவை எதிா்க்கட்சித் தலைவா் வலியுறுத்தல்

புதுவையில் இணையக் குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு நவீன உபகரணங்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வலியுறுத்தினாா்... மேலும் பார்க்க

நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம்: ஜகதீப் தன்கா்

புதுச்சேரி: நாட்டின் பாதுகாப்புக்கும், முன்னேற்றத்துக்கும் அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக் கொண்டாா். ‘தேசத்தைக் கட்டி எழுப்புவதில் சு... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை.யில் 25% இடஒதுக்கீடு: குடியரசு துணைத் தலைவரிடம் கோரிக்கை

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் அனைத்துப் படிப்புகளிலும் புதுச்சேரி மாணவா்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் முதல்வா் என்.... மேலும் பார்க்க