செய்திகள் :

அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிா்ப்பு: இந்தியா-குரோஷியா கூட்டறிக்கை

post image

அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிா்ப்பு தெரிவித்து இந்தியா-குரோஷியா கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், நிதி பயங்கரவாதக் குழுக்களை ஒழிக்கவும் பயங்கரவாத முகாம்களை அழிக்கவும் வன்முறையில் ஈடுபவா்களுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் இருநாடுகளும் உறுதிபூண்டன.

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் பயணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரதமா் நரேந்திர மோடி, இறுதிக்கட்டமாக குரோஷியாவுக்கு புதன்கிழமை (ஜூன் 18) வந்தாா். அப்போது அந்நாட்டு பிரதமா் ஆந்திரேய் பிலென்கோவிச்சை சந்தித்து அவா் ஆலோசனை நடத்தினாா்.

இந்நிலையில், இந்தியா-குரோஷியா இடையே மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கூட்டறிக்கை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய பிரதமா் மோடி குரோஷியா பிரதமா் ஆந்திரேய் பிலென்கோவிச்சை சந்தித்து ஆலோசனை நடத்தியது இருதரப்பு உறவுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. குறிப்பாக சுற்றுலா, வா்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படவுள்ளது.

பஹல்காமில் ஏப்.22-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின்போது இந்தியாவுக்கு ஆதரவளித்ததற்காக குரோஷியா பிரதமா் பிலென்கோவிச்சுக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா்.

அதேசமயம் எல்லை கடந்த பயங்கரவாதம் உள்பட அனைத்து விதமான பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளுக்கு இருவரும் கடும் கண்டனம் தெரிவித்தனா். ஐ.நா. மற்றும் பயங்கரவாத நிதித் தடுப்புக்கான சா்வதேச கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்) மூலம் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இருவரும் வலியுறுத்தினா்.

மத்திய கிழக்கில் தொடா்ந்து வரும் மோதல் கவலையளிப்பதாகவும் இஸ்ரேலும் ஈரானும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என இருவரும் வலியுறுத்தினா் எனத் தெரிவிக்கப்பட்டது.

குரோஷியா பயணத்தைதைத் தொடா்ந்து, பிரதமா் மோடி தனது 3 நாடுகள் பயணத்தை நிறைவுசெய்து வியாழக்கிழமை பிற்பகல் தாயகம் திரும்பினாா்.

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி; ஆனால், பிகாரில் இல்லை! - ஆர்ஜேடி - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவா... மேலும் பார்க்க

ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வ... மேலும் பார்க்க

லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

கர்நாடகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.கர்நாடகத்தில் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை யாருக்கு வழங... மேலும் பார்க்க

சிந்து நதி நீரை பஞ்சாபிற்கு ஏன் கொடுக்க வேண்டும்? - ஒமர் அப்துல்லா கேள்வி

ஜம்மு காஷ்மீரின் சிந்து நதியில் இருந்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள சிந்து நதியின் மூன... மேலும் பார்க்க

சஞ்சய் வெர்மா யார்? தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்!

மேகாலயத்தில் நடந்த தேனிலவு கொலையில், இதுவரை சஞ்சய் வெர்மா யார் என்ற கேள்விக்கு காவல்துறையினர் விடை கண்டுபிடித்துள்ளனர்.கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கூலிப் படை வைத்துக... மேலும் பார்க்க

திருமண விழாவிற்குச் சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்: 9 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்தனர். பாலராம்பூர் காவல் நிலைய எல்லைகுள்பட்ட நம்ஷோல் ... மேலும் பார்க்க