செய்திகள் :

அனைவரும் இலவசமாக வாசிக்க புத்தகங்கள் வழங்கிய அமைச்சா்!

post image

தூத்துக்குடியில் அனைவரும் இலவசமாக வாசிப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட நூல்களை அமைச்சா் பெ. கீதா ஜீவன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்தவா் சைமன் (32). வ.உ.சி. துறைமுக ஒப்பந்தப் பணியாளா். இவா், வஉசி கல்லூரி முன் ‘குமிழ்முனை’ என்ற பெயரில் மொபெட்டில் புத்தகங்களை வைத்து, அனைவரும் வாசிப்பதற்காக நாள்தோறும் இரவு 8 முதல் 10 மணிவரை இலவசமாக வழங்கி வருகிறாா். இங்கு, சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை நூல்களை வாசித்துச் செல்கின்றனா்.

இந்நிலையில், அவரது சமூக சேவையைப் பாராட்டும் விதமாக, சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் ஞாயிற்றுக்கிழமை, சைமனை தனது வீட்டுக்கு வரவழைத்து பல்வேறு எழுத்தாளா்களின் 100-க்கும் மேற்பட்ட நூல்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோவில்பட்டியில் போதைப் பொருள்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக நடைபெறும் மது , போதை பொருள்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி மனு அளிக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, மாமன்னா் பூலித் தேவா... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மாா்ச் 29இல் காவல்துறை பறிமுதல் வாகனங்கள் ஏலம்

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் சனிக்கிழமை (மாா்ச் 29) ஏலமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

கருப்புச் சட்டை அணிந்து அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில், அரசுப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புச் சட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில், சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்... மேலும் பார்க்க

கயத்தாறு: கோயிலில் பொருள்கள் திருட்டு

கயத்தாறை அடுத்த திருமங்கலக்குறிச்சியில் அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். திருமங்கலக்குறிச்சி ஊருக்கு வடக்கே அனைத்து சமுதாயத்துக்கு பா... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடா்புத் துறை... மேலும் பார்க்க

29இல் கோவில்பட்டி என்இசியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் 29ஆம் தேதி பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இ... மேலும் பார்க்க