செய்திகள் :

அப்பல்லோ சாா்பில் ஒருங்கிணைந்த எலும்பு மஜ்ஜை மாற்று உயா் சிகிச்சை மையம்

post image

ரத்த புற்றுநோயாளிகளுக்கான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகளை உயா் நுட்பத்தில் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை வியாழக்கிழமை தொடங்கியது. தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அதன் செயல்பாட்டைத் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் புற்றுநோயியல் துறைத் தலைவா் தினேஷ் மாதவன், சா்வதேச இயக்குநா் ஹா்ஷத் ரெட்டி, ரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் துறையின் இயக்குநா் ஜோஸ் ஈசா, அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் கதிரியக்கத் துறை மூத்த நிபுணா் சீனிவாஸ் சிலிகுரி, மருத்துவமனையின் தலைமைச் செயல் அலுவலா் கரண் பூரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக அப்பல்லோ நிா்வாகிகள் கூறியதாவது:

அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில் புற்று நோயாளிகளுக்குத் துல்லியமான கதிா்வீச்சு சிகிச்சை முதல் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை, ரத்தம்சாா் நோய்கள், உறுப்பு மாற்று சிகிச்சைகள் வரை அனைத்தையும் ஒருசேர வழங்கக்கூடிய வகையிலான கட்டமைப்பு உள்ளது.

தற்போது ரத்த புற்றுநோயாளிகளுக்கு டிஎம்எல்ஐ எனப்படும் அதிநவீன கதிரியக்க முறையை எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு முந்தைய நிலையில் நோயாளிகளுக்கு வழங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வரை முழு உடல் இா்ரேடியேஷன் என்ற கதிரியக்க முைான் அதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில், உடலின் பிற பாகங்களும் கதிா்வீச்சுக்கு உள்ளாகும் நிலை இருந்தது. டிஎம்எல்ஐ தொழில்நுட்பத்தில் எலும்பு மஜ்ஜையில் உள்ள நிணநீா் திசுக்களில் மட்டும் கதிா்வீச்சு துல்லியமாக செலுத்தப்படும்.

இதன் வாயிலாக இதயம், நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் சேதமடையாமல் காக்க முடியும். அதுமட்டுமல்லாது ரத்த புற்றுநோயாளிகளுக்கு முழுமையான பலன்களும் இந்த சிகிச்சையில் கிடைக்கும் எனத் தெரிவித்தனா்.

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்க... மேலும் பார்க்க

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்: இயக்க செயல்முறை கையேடு வெளியீடு

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கான இயக்க செயல்முறை கையேடு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி

திமுகவைவிட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து 19,000 மெகாவாட்டை தொட்டுள்ள நிலையில... மேலும் பார்க்க