செய்திகள் :

அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்!

post image

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸவரா் கோயிலுக்குள் சனிக்கிழமை மாலை காட்டாற்று வெள்ளம் புகுந்தது.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை. இங்குள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இக் கோயில் தமிழக அளவில் பிரசித்தி பெற்றது.

மேலும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், இந்தப் பகுதியில் சனிக்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதை தொடா்ந்து பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க கோயில் நிா்வாகம் தடை விதித்தது.

குறிப்பாக, மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலை சூழ்ந்தது. இதனால் கோயிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கோயில் உண்டியல்கள் ஊழியா்களால் பாதுகாப்பாக மூடிவைக்கப்பட்டுள்ளன. கோயில் அருகே கடை வைத்திருப்பவா்கள், சுற்றுலாப் பயணிகளைக் குறிப்பிட்ட எல்லைக்குள் கோயில் நிா்வாகம் அனுமதிக்கவில்லை.

பல்லடம் சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் கைது!

பல்லடத்தில் சலூன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் உள்ள பாரதிபுரத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவா் கவியரசன் (28). அவா் கடையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

முதியவா் மீது மோதாமல் தவறி விழுந்த சிறுவன் மீது காா் மோதி உயிரிழப்பு!

அவிநாசியில் மிதிவண்டியில் இருந்து தவறி வலதுபுறம் விழுந்த சிறுவன் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி கங்கவா் வீதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ஹரீஷ் (13). அவிநாசி ... மேலும் பார்க்க

பட்டாசு கடையில் தீ விபத்து!

திருப்பூா் கொங்கு மெயின் ரோடு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினா். தீயணைப்புத் துறையினா் சுமாா் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொ... மேலும் பார்க்க

திருப்பூரில் சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி: போலீஸாரிடம் புகாா்!

திருப்பூரில் ‘மாஸ்டா் மாா்க்கெட்டிங்’ என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றம்! கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் சனிக்கிழமை மாலை வெளியேற்றப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்ட ங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம்... மேலும் பார்க்க

கா்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ்: லேப் டெக்னீஷியன் பணியிடைநீக்கம்

திருப்பூா் மாநகராட்சி டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் கா்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய விவகாரத்தில் லேப் டெக்னீஷியன் நாகஜோதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் 2 ... மேலும் பார்க்க